இன்று கொடிநாள்

Image may contain: cloud, mountain, sky, outdoor, nature and text

இந்திய தேசம் இன்று கொடிநாள் எனும் தேசிய விழாவினை சிறப்பிக்கின்றது

இத்தேசம் வலுவாகவும், அமைதியாகவும் இருக்க முதல் காரணம் இந்த தேசத்தின் ராணுவம். அவர்களுக்காகவும் அவர்களுக்கு நிதிகொடுக்கும் நாளாகவும் இது சிறப்பிக்கபடுகின்றது

நாமெல்லாம் அமைதியாக வாழ, சம்பாதிக்க, சண்டையிட இன்னும் என்னவெல்லாமோ செய்து உலாவிகொண்டிருக்க, நிம்மதியாக தூங்கி எழ அந்த வீரர்கள் செய்யும் தியாகம் கொஞ்சமல்ல‌

காஷ்மீரத்து பனியாகட்டும், ராஜஸ்தான் பாலையாகட்டும், அசாமின் கடும் காடுகளாகட்டும், பொங்கும் கடலாகட்டும் அதனை எல்லாம் சமாக கருதி இத்தேசத்தினை காத்து நிற்கும் வீரர்கள் அவர்கள்

அவர்களின் தியாகத்தை நினைவு கூறவும், தேசத்தை காக்கும் கடமையில் அங்கம் இழந்தவர்கள், அனாதை ஆனவர்களை காக்கும் விதமாக இந்த நிதி திரட்டலும் நடைபெறும்

முன்பெல்லாம் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், கட்சியினர் என எல்லோரும் இதில் ஈடுபடுவார்கள்

தேசம் முழுக்க ஒரு எழுச்சிநாளாக கருதபடும், அப்படி ஒரு நாட்டுபற்று இருந்தது

கலைஞர் கருணாநிதி இதில் முன்னால் நின்றவர்

“நிதி மிகுந்தவர் பொற்காசு தாரீர், நிதி குறைந்தவர் ஒருகாசு தாரீர்” என தனக்கே உரித்தான தமிழில் உருகி கேட்ட காலம் எல்லாம் உண்டு

இப்பொழுது எப்படி சிறப்பிக்கின்றார்கள், மாநில முதல்வர் என்ன செய்கின்றார் என்றெல்லாம் தெரியவில்லை

அதே மெரினாவில் முன்பு கொடிநாளுக்காக மாணவ மாணவியர் பொதுமக்களுக்கு தேசிய கொடியினை கொடுத்த்து நன்கொடை பெறுவார்கள்

இன்று அதே மெரினாவில் அம்மா.. என ஒரு கூட்டம் அழுதுகொண்டிருக்கின்றது, மாபெரும் வெட்க கேடு அது.

அரசும், தேசபற்று மிக்கவர்களும் இந்நாளை சிறப்பித்தல் வேண்டும். தேசபக்தி என்பது மதவிவகாரங்களில் காட்டபடுவது அல்ல, இம்மாதிரி விஷயங்களில் நிரூபிக்கபடுவது

எந்த கட்சி, எந்த அணி என்பதெல்லாம் இங்கு கடந்தவை. இந்தியனாக இந்திய ராணுவத்திற்கு நாமெல்லாம் பக்க பலமாக இருக்கின்றோம் என காட்டவேண்டிய நேரமிது

நிர்மலா சீத்தாராமன் போன்றோர் மீது சர்ச்சை இருப்பினும், ராணுவவீரர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையினை வாழ்த்தியே தீரவேண்டும்

அப்படிபட்டவர்கள் , கலெக்டர் முதலான அதிகாரிகள் எல்லோரும் களத்திற்கு வரட்டும், முன்னின்று இந்த கொடிநாளை சிறப்பிக்கட்டும், இத்தேசம் அள்ளி கொடுக்கட்டும்

தமிழகம் இந்திய ராணுவத்திற்கு வீரர்களையும் தளபதிகளையும் , கலாம் போன்ற விஞ்ஞானிகளைமட்டுமல்ல, , நிதிகளையும் அள்ளி கொடுத்திருக்கின்றது

சீன யுத்தம், பாகிஸ்தான் யுத்தங்களில் காமராஜர் கேட்டுகொண்டதற்கிணங்க எல்லோரும் கொடுத்தார்கள், நடிகர் நடிகைகள் அள்ளி கொடுத்தார்கள்

நடிகை சாவித்திரி அன்றே கிட்டதட்ட 80 சவரன் நகைகளை கழற்றி கவர்னரிடம் கொடுத்தார் என்பதெல்லாம் கண்ணில் நீர்வரவழைக்கும் தியாகங்கள்

அதனையும் தாண்டி ராணுவ வீரர்களை உற்சாகபடுத்த கலைதுறை எல்லைக்கு சென்று கலைநிகழ்ச்சி எல்லாம் நடத்தியிருகின்றது

அப்படிபட்ட மிக தேசபற்று மிக்க தமிழகம் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றது

பின் இந்த பிரிவினை கும்பல்கள், புலிகளை ஆதரிக்கின்றேன் பேர்வழி என கிளம்பி நமது பெருமை மிகு ராணுவத்தை பழித்து என்னவோ சொல்ல சில தமிழர் கிளம்பி , இன்னும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌

அதில் முக்கியமானவன் சிறையில் இருக்கும் பேரரிவாளன், இந்திய ராணுவத்தை “சாத்தானின் படைகள்” விமர்சித்து என புலிகள் எழுதிய புத்தகத்திற்கு முழு உதவி செய்ததில் அவனும் ஒருவன், இன்னும் நளியின் அண்ணன் என ஏகபட்டோர் உண்டு

இவர்கள்தான் தேச துரோகிகள், இந்நாட்டு ராணுவத்தின் பாதுகாப்பில் வாழ்ந்துகொண்டு அந்நாட்டு ராணுவத்திற்கே துரோகம் செய்த கொடுமதியாளர்கள் இவர்கள்..

சென்னை மெரீனவின் கல்லறைகளை அகற்றிவிட்டு, அங்கு இலங்கையில் செத்த இந்தியவீரர்களுக்காக ஒரு நினைவிடம் அமைத்து அஞ்சலி செலுத்தியே தீரவேண்டும், அப்பொழுதுதான் வருங்கால தமிழகம் உருப்படும், தேசபக்தி அதிகரிக்கும்

இது அவசரமாக செய்ய வேண்டிய விஷயம். வணங்கவேண்டியது அவர்களே தவிர, ரே கமிஷனில் தப்பியவரும், குன்ஹா காரி துப்பியவரும் அல்லவே அல்ல‌

இந்நாளில் இத்தேசத்திற்காகவும் அதன் பாதுகாப்பிற்காகவும் இமயமலை, சீன எல்லை பஞ்சாப் எல்லை, பொற்கோவில் சம்பவம், ராஜஸ்தான் எல்லை, வங்க எல்லை, அசாம் எல்லை, வங்கம், இலங்கை என எல்லா இடங்களிலும் உயிர் நீத்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி தெரிவிப்போம்

அந்த மாவீரர்களின் தியாகம் ஒரு நாளும் வீணாகாது. மாவீரன் கரியப்பா, திம்மையா, அர்ஜன்சிங் மானெக்ஷா என பெரும் வரிசையில் வந்த அந்த அர்பணிப்பு மிக்க தீரர்களின் தியாகமும் வீணாய் போகாது

இத்தேசம் மிக பெரும் உயரத்தை எட்டவும், அமைதியாக வளர்ச்சிபாதையில் நடைபோடவும் தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்பணித்து காவல் தெய்வங்களாய் நிற்கும் அந்த உன்னதமான தியாக வீரர்களுக்கு வீர வணக்கம்

இம்மாபெரும் நாட்டின் பெரும் அரண் அவர்கள், அவர்கள் மட்டுமே.

இந்நாளில் தமிழகத்தில் நிதிதிரட்ட கலைஞர் சொன்னதை விட என்ன வார்த்தை உயர்வாக வந்துவிட போகின்றது?

பாசிச புலிகளை நம்பி, அமைதிபடையினை வரவேற்கமாட்டேன் என தன் பொறுப்பில் இருந்து நழுவிய பாவத்திற்கு பின்பு இப்படி பரிகாரம் தேடிகொண்டார்

(அரசியல் அமைப்பு சட்டப்படி ஒரு முதல்வர் அப்படி செய்ய கூடாது, அது சட்டத்தை மீறிய செயல். கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட ஒரு காரணமும் அதுதான்)

“நிதி மிகுந்தவர் பொற்காசு தாரீர், நிதி குறைந்தவர் ஒருகாசு தாரீர்” என பின்பு இந்தியனாய் நின்றார்.

நம் காவல் தெய்வங்களுக்கு கரம் கொடுப்போம், அவர்களுக்கு பின்னால் நாம் இருக்கின்றோம் எனும் நம்பிக்கையினை கொடுப்போம்

அந்த உற்சாகத்தில் அவர்கள் மிகபெரும் சாதனைகளை செய்வார்கள், தேசம் நிலைத்து செழிக்கும்

ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்