ஸ்பெக்ட்ரம் விஷயத்தில அப்படி இல்லண்ணே…
அண்ணே நீங்க நினைக்கிற மாதிரி ஸ்பெக்ரம் வழக்கில் உள்நோக்கம் எல்லாம் இல்லை, சட்டம் புரியாமல் பேசாதீர்கள். நீதிதுறையில் அரசு தலையிட முடியாதுண்ணே
அப்படியா?
ஆமாண்ணே அது ரொம்ப ஸ்ட்ரிக்ட்
அப்போ ஜெயா சாகும்வரை தீர்ப்பே வரலியே ஏன்?
நீதிபதி அவ்வளவு கவனமா படிச்சாருண்ணே
சசிகலாவுக்கு உடனே தீர்ப்பு வந்துச்சே எப்படி?
அவங்க குற்றவாளிண்ணே, குன்ஹாவே சொல்லிட்டாரு
அதாண்டா சொல்லிட்டாருல்ல, உடனே பிடிச்சு உள்ளே ஜெயா கூட போட்டிருக்கலாமே?
சட்டம் எல்லோருக்கும் அவகாசம் கொடுக்கும்ணே
அதே சட்டம் சசிகலா முதல்வராகி 5 வருஷம் ஆள அவகாசம் கொடுத்திருக்கலாமே, ஏன் அவர் முதல்வர் பதவிக்கு வரும்பொழுது தீர்ப்பு வரணும்
அது எப்படியோ நடந்துபோச்சிண்ணே
டேய் எப்படியோ இல்லடா, இப்படித்தான் நடக்கணும்னு திட்டம் போட்டு நடந்திருக்கு இது புரியலியா?
ஸ்பெக்ட்ரம் விஷயத்தில அப்படி இல்லண்ணே, நியாத்தைத்தான் கோர்ட் சொல்லும்
சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்