கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள்

கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அங்கு சென்றனர் : செய்தி

ஏற்கனவே குமரி மாவட்டம் கடும் அதிருப்தியில் இருக்கின்றது, இப்பொழுது தூத்துகுடியும் சேர்ந்தாயிற்று

இது தமிழக அரசுக்கு மிகபெரும் தலைகுனிவு என்பதில் சந்தேகமில்லை, பாரதிராஜா பாணியில் சொல்வதென்றால் “தகப்பன் இருக்கும்பொழுது அடுத்தவீட்டுகாரனிடம் உதவிக்கு செல்வது அந்த தகப்பன் செத்ததற்கு சமானம்”

தலைகுனிவு, அவமானம் பற்றியெல்லாம் இந்த அரசு மிகவும் பழகியிருக்கும் போல

முன்பு கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைய பெரும் போராட்டம் நடந்தது, இனி மறுபடியும் கேரளாவோடு இணைய பெரும் போராட்டம் தொடங்கலாம் போல‌

ஆனால் போவது குமரியாக மட்டும் இருக்காது ஏகபட்ட மாவட்டங்கள் தயாராக இருக்கும்போல தெரிகின்றது