ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது
எதிர்பார்த்தபடியே ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது, ராஜிவ் காலத்திற்கு பின் இஸ்ரேலுடன் நெருங்கும் இந்தியா கூட வாய்திறந்து பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கின்றது
ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ஐநா சபை கூடியது. இதுவரை மேற்காசிய விவகாரத்தில் வாய்திறக்காத சீனா கூட இது அநியாயம் என பேச தொடங்கிவிட்டது
இந்தியா தான் பாலஸ்தீன் விடுதலையினை எந்நாளும் ஆதரிப்பதாக கூறிவிட்டு, எங்களை மூன்றாம்நாடு நிர்பந்திக்க முடியாது என சொல்லியிருக்கின்றது
ஆக ஏதோ ஒரு நாடு இந்தியாவின் கழுத்தை பிடித்து குனியவைத்து குத்தியிருக்கின்றது என்பது புரிகின்றது
என்னதான் தமிழக கட்சிகள் சண்டையிட்டாலும் பாஜக என்றவுடன் ஒன்றாக இணைந்து ஆரிய பாசிசம் என கத்துவார்கள் அல்லவா? அப்படி அரேபிய நாடுகளுக்குள் ஆயிரம் அடிதடி என்றாலும் ஜெருசலேம் எனும் புள்ளியில் அவர்கள் ஒன்றாக குரல்கொடுப்பார்கள்
அது நடக்கின்றது
பலத்த எதிர்ப்பிலும் டிரம்ப் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என்பதில் விடாபிடியாக இருக்கின்றார், இப்பக்கமோ எல்லா அரசுகளும், தீவிரவாத இயக்கங்களும் கச்சை கட்டுகின்றன
விவகாரம் சூடுபிடிக்கின்றது