அழிவில் இருக்கும்பொழுதெல்லாம் சாதி தெரியாது

காமராஜர் கன்னியாகுமரியினை தமிழகத்துடன் சேர்த்தபொழுது இது நாடாருக்கான செயல். நாடார்களை ஒரு நாடார் சேர்க்கின்றார் என பொங்கிவர்களையும்

நாடார்கள் மிகுந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இருப்பதே சரி என சொன்ன நாடார் சங்கங்களையும்

இப்பொழுது பழனிச்சாமி அரசு கன்னியாகுமரியினை ஒதுக்கி வைக்கும்பொழுது காணவில்லை

அட அவர்களை விடுங்கள், நாடார் சங்கங்களையும் காணவே இல்லை

எவனாவது ஒருத்தன் கன்னியாகுமரி நாடார்கள் நிரம்பியது என்பதால் பழனிச்சாமி அரசு கண்டுகொள்ளவில்லை என கிளம்புகின்றானா என்றால் இல்லை

அவனுக்கு தெரியுமா என்றால் தெரியும் , ஆனால் ஏன் சொல்லமாட்டான் என்றால் அதுதான் விஷயம்,

காரணம் என்ன? நாடார் சங்கங்கள் எல்லாம் ஏன் அமைதி?

விஷயம் இருக்கின்றது

ஆர்.கே நகரில் நாடார்கள் வோட்டு அதிகம் என்கின்றார்கள், ஆமாம் என்பது போல எர்னாவுர் நாராயணன் எல்லாம் முன்னால் நிற்கின்றார்

இப்பொழுது கன்னியாகுமரி விவகாரத்தை இழுத்தால் அது எங்கே சிக்கலாகும் என்பது தெரியாதா?

அதனால் இப்பொழுது கன்னியாகுமரி மக்கள் அத்துகொண்டு போகின்றோம் என்ற விபரீத நிலைக்கு வந்தபின்னும் “நாடார் வெறுப்பு” என்ற வார்த்தை வரவே இல்லை

ஆனால் நிலமை அமைதியாக‌ இருக்கும்பொழுது நாடார்கள் என்பதால் அவர்கள் இங்கு இணைந்தார்கள் என கிளப்பிவிடவேண்டியது

ஆக நாடார் சங்கமும் அதன் முழங்கங்களும் ஏன் காமராஜர் நாடார் என்பதால் கன்னியாகுமரியினை இணைத்தார் என சொல்லும் எதிர்கட்சி முழக்கங்கள் எல்லாமே வோட்டு நாடகம், வேறு ஒன்றுமே இல்லை

இனி தேர்தல் வரட்டும், கன்னியாகுமரியில் நாடார்களும் அவர்களின் சங்கங்களும் எப்படி எல்லாம் பொங்குவார்கள் என தெரியும்

மற்றபடி அழிவில் இருக்கும்பொழுதெல்லாம் சாதி தெரியாது, தெரியவே தெரியாது.

எவனாவது இது அரசின் “நாடார் வெறுப்பு” என சொல்லட்டும் பார்க்கலாம், இப்பொழுதெல்லாம் சொல்லவே மாட்டார்கள்

இதற்கு ஒரு பயலும் வரமாட்டான், ஆனால் ராக்கெட் ராஜா எனும் ரவுடியினை பாதுகாக்க பெரும் போராட்டம் எல்லாம் நடத்துவார்கள், அவ்வளவுஅறிவார்ந்த சமூகம் நாடார் சமூகம்