பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

முன்பெல்லாம் அடிக்கடி மாதம் இருமுறை ஓடி சென்று மோடிக்கு வணக்கம் சொன்ன பழனிச்சாமிதான் இப்பொழுது கடிதம் எழுதுகின்றாராம்

எப்படி எல்லாம் இவரும் பன்னீரும் ஓடினார்கள்?, டெல்லி செல்லும் விமானங்கள் எல்லாவற்றிலும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே இருந்தார்கள் என்பது உலகறிந்த விஷயம்

ஆனால் மிக முக்கிய பிரச்சினையில் இவர் கடிதம் மட்டும் எழுதுவாராம், ஏன் என்றால் ஜெருசலேம் பிரச்சினை தொடர்பாக டிரம்பை சந்தித்து பெரும் ஆலோசனையில் இருக்கின்றார் பழனிச்சாமி

கடித்தத்தில் “அய்யா வல்லவராயரே, நான் ஆளவேண்டுமய்யா..” என்ற வரி நிச்சயம் இருக்கும்


ம‌ருத்துவ மாணவர்கள் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டும் தங்கள் பணியின் பொறுப்பை உணர்ந்தும் போராட்டத்தை கைவிட வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

நல்லது, அப்படியே அமைச்சரவையின் முக்கியத்துவம் உணர்ந்தும், இந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த அரசு பதவியினை விட்டு இறங்க தயாரா?