அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும்…
அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும், அதனை கையில் இருக்கும் எல்லா ஆவணத்தோடும் இணைத்தாக வேண்டும் என ஒரே அறிவிப்புகள்
சரி வெளிநாட்டில் இருப்பவன் என்ன செய்ய என தூதரகத்தில் விசாரித்தால் அதெல்லாம் இங்கு முடியாது என்றொரு பதில் மட்டும் வருகின்றது.
என்ன செய்யலாம் என கேட்டால், தெரியாது உன் ஊருக்கு போ என்ற ரீதியில் பதில்வருகின்றது, விமான டிக்கெட் தருவீர்களா என்றால் சத்தமே இல்லை
ஆக வெளிநாட்டுவாசி எல்லாம் இந்தியனே அல்ல என்றொரு முடிவுக்கு இந்த அரசு வந்துவிட்டது போல
இனி வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் நாடுகடந்த அரசை அமைத்து, அதற்கொரு பிரதமரையும் நியமிக்கவேண்டும் போலிருக்கின்றது.
யாராவது இதனை அந்த சுஷ்மா சுவராஜுக்கு தெரியபடுத்துங்கள், இல்லாவிட்டால் கடலில் காணாமல் போன குமரி மீணவர் கணக்கில் வெளிநாட்டுவாழ் இந்தியனையும் சேர்த்துவிடுவார்கள்