இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா வளைத்தாயிற்று

ஒரு வழியாக இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா வளைத்தாயிற்று. பெரும் பணம் கொடுத்து அதனை அவர்கள்தான் நிர்மாணம் செய்தார்கள்

இப்பொழுது 99 வருட குத்தகைக்கு எடுத்தாயிற்று, இது இந்தியாவிற்கு நிச்சயம் அச்சுறுத்தல், எவ்வளவோ முயன்றும் இந்தியாவால் அதனை தடுக்க முடியவில்லை

திரிகோணமலை அங்கு மிகமுக்கியமான இடம், இன்னும் இந்திய கட்டுப்பாட்டிலே இருக்கின்றது என்பது ஆறுதலான விஷயம் என்றாலும் அதற்கு மிக அருகில் ஹம்பாந்தோட்டாவில் சீனா கால்வைத்திருப்பது நல்ல அறிகுறி அல்ல‌

இது எங்கள் கடல்வணிகத்திற்கான பாதையில் ஓய்வெடுக்கும் இடம் என சீனாவும், இலங்கை மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிராக யாரையும் செயல்பட விடமாட்டோம் என இலங்கை சொன்னாலும் அதனை நம்ப முடியாது

இலங்கை என்பது சிறிய நாடுதான், ஆனால் தந்திரமானது இந்தியாவோடு நெருங்காது, நெருங்கினால் பூட்டான் போல் ஆக்கிவிடுவார்கள் என தெரியும், விலகவும் செய்யாது முற்றிலும் விலகினால் தொலைத்துவிடுவார்கள் என்பதும் தெரியும்

அதனால் ஒரு மாதிரி ஆட்டம் ஆடும்

1971ல் வங்க போரில் பாகிஸ்தானை வலிய இழுத்து ஆதரவளித்த நாடு அது, பின் அணுகுண்டு சோதனைக்காக இந்திரா கச்சதீவினை எல்லாம் கொடுத்து நாடகாமாடினார். உள்ளூர இருவருக்குமே பகைதான்

1980களில் அமெரிக்கா திரிகோணமலையில் கால் வைத்தபொழுது பல விஷயங்களை கணக்கிட்டுத்தான் போராளிகளை இந்தியா வளர்த்தது

அதன் திட்டபடியே திரிகோணமலையில் தன் பிடியினை இறுக்கியது, ஆனால் அதன் நிறைவேறா திட்டம் இந்தியாவில் தன் ராணுவ முகாமினை அமைப்பது

அப்படி இந்திய முகாம் அமைக்கபட்டிருக்குமாயின் இந்த ஹம்மாந்தோட்டா எல்லாம் சீனா பக்கம் சென்றிருக்காது, ஆனால் அப்படி சென்ற அமைதிபடையினை புலிகள் விரட்டியது எல்லாம் பன்னாட்டு சதி

சரி இந்தியா எப்படி சறுக்கியது?

இலங்கையினை மிரட்ட போராளி குழு இல்லாத காலத்தில் சேது கடலை தோண்டுவதாக சொல்லியது. சேது சமுத்திரம் பற்றி பெரிதாக எழுதவேண்டும் , ஆனால் இந்தியா அப்படி சொன்னதின் அர்த்தம் இந்தியா அப்படி செய்தால் கொழும்பின் வருமானம் பாதிக்கும், ஹம்மந்தோட்டா அம்பேல்

இந்த மிரட்டலின்பொழுது எப்படியோ தாஜா செய்த இலங்கை பின் தன் சுயரூபத்தை காட்டிவிட்டது. இந்தியா இன்னும் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவில்லை, அவ்வப்பொழுது ஆய்வுகள் நடக்கின்றன‌

கொழும்பின் முதுகெலும்பினை முறிக்க கன்னியாகுமரி பக்கம் இணையம் எனும் மாபெரும் துறைமுகத்தை நிர்மானிக்க இந்தியா முடிவு செய்தது, விரைவில் அது தொடங்கலாம் என்கின்றார்கள்

அது செயல்பாட்டுக்கு வரும்பொழுது கொழும்பின் வருமானம் பாதிக்கபடும் ஹம்மாந்தோட்டையில் சீன கப்பல் மட்டும் வரலாம்

சீனா ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் இன்று ஹம்பாந்தோட்டையில் விழா நடத்துகின்றது என்றால் காரணம் இல்லாமல் இல்லை

பாகிஸ்தானின் குவெட்டா துறைமுகத்தை சீனா நிர்மானிக்க அதன் அருகில் ஈரானின் சபஹர் துறைமுகத்தை இந்தியா நிர்மானித்தது, அது சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்தது

அந்த வெறுப்பில் இப்படி இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்து மகிழ்கின்றது சீனா

இது ஒரு வகையில் இருக்கட்டும், யாராவது இரு அல்லக்கைகள் சண்டையிட்டாலே அங்கு என்னடா சத்தம்? என வருவது அமெரிக்கா பாணி இல்லாவிட்டால் என்ன உலக தாதா?

அவர் ஏன் அமைதியாக இருக்கின்றார்?

அவருக்கு இலங்கை அருகில் டீகோ கார்சியா தீவு முகாம் இருப்பதால் இப்போதைக்கு சிக்கல் இல்லை, ஆனால் தீவு ஓணர் பிரிட்டன் அமெரிக்காவினை காலி செய்ய சொல்கின்றார்

இந்துமா கடலில் தனக்கு தளமில்லை என்றால் தலைவெடித்துவிடும் நாடு அமெரிக்கா, அதன் உலக வல்லரசு பட்டம் நிலைக்காது

இதனால் இலங்கையில் கால் ஊன்ற அமெரிக்கா கடும் முயற்சியில் இருக்கின்றது

இரு வல்லரசுகள் இந்திய காலடியில் வலுபெறுவது நல்ல விஷயம் அல்ல‌

இந்திரா முன்பு அட்டகாசமாக சமாளித்தார், இலங்கையினை எப்படி அடிக்க வேண்டுமோ அப்படி அடித்தார்

இந்த அரசுக்கு எப்படி திட்டம் இருக்கின்றதோ தெரியாது, அணுவுலை உட்பட்ட பல மகா முக்கிய கேந்திரங்கள் இருக்கும் தென்னக பாதுகாப்பு மகா முக்கியம்

இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும் என தெரியவில்லை, பல பரபரப்பு காட்சிகள் இனி வர வாய்ப்பு உள்ளது