லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி
லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி
இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கபடும், படகு போன்றவைகளுக்கு இழப்பீடும் வழங்கபடும் என சொல்லியிருக்கின்றார்
பாதிக்கபட்டு போராட்டத்தில் இறங்கியோர் மீது பதியபட்ட வழக்குகளில் சில சலுகைகள் காட்டபடும் என சொல்லியிருப்பதும் நல்ல செய்தி
வெறும் அறிவிப்போடு இல்லாமல், உடனே இந்த அறிவிப்புகள் செயல்வடிவம் பெற்றால் நிச்சயம் பழனிச்சாமியினை வாழ்த்தலாம்
மாநில அரசு தன் உதவியினை அறிவித்துவிட்டடு, மத்திய அரசு என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுந்து கேட்டால், அவர்களோ மத்திய அரசு அழுத்தத்தில் மாநில அரசு இதனை செய்கின்றது என நாங்கள் நாளை சொன்னால் அதனை தமிழக அரசு மறுக்கவா முடியும் என நமட்டு சிரிப்பு சிரிக்கின்றார்கள்.
ஆளாளுக்கு ஒரு கணக்கோடு அலைகின்றார்கள், எப்படியோ மக்களின் கண்ணீர் துடைக்கபட்டு ஆறுதல் கொடுக்கபட்டால் போதும்.