பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா சாவித்திரி ராமகிருஷ்னன்

முகநூலில் ஏராளமான நண்பர்கள் கிடைத்ததை போல நல்லதொரு தாயும் கிடைத்தார்

முதிர்ந்த வயது, அதற்கேற்ப‌ பக்குவபட்ட மனநிலை, எல்லோரையும் தன் பிறப்பு போல் நோக்கும் மனோபாவம் என மிக உயர்ந்த மனதிற்கு சொந்தக்காரர் அவர்

Savithri Ramakrishnan

மிக சிறந்த பக்திமான், பக்திகேற்ப வார்த்தையிலும் செயலிலும் அவ்வளவு மென்மை. அவரை நட்பாக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி

அந்த தாயிடம் அவரின் உயர்ந்த பண்பை விட மிஞ்சி நிற்பது அற்புதமான ஆங்கில அறிவு

உண்மையில் ஆங்கிலம் மிக பண்பாகவும் மென்மையாகவும் நாகரீகமாகவும் பேசவேண்டிய மொழி, பிரிட்டிஷ் ஆங்கிலம் என்பது அவ்வளவு தரமாக இருந்திருக்கின்றது

பின் இந்த அமெரிக்கா என்றொரு நாடு உருவாகி பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கு எதிராக கொச்சை ஆங்கிலத்தை பேச தொடங்கி விட்டது

இந்தியா சுதந்திரம்பெறுமளவும் இங்கு ஆங்கிலம் நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, அடுத்த 20 ஆண்டுகளுக்கு மோசமில்லை ஆனால் 1980க்கு பின் இங்கு ஆங்கிலம் படுமோசமாயிருக்கின்றது, அதுவும் அமெரிக்க கம்பெனிகள் வந்தபின் அவ்வளவுதான்

இன்று கல்லூரியோ பல்கலைகழகமோ அந்த அழகான ஆங்கிலத்தை கற்பிப்பதே இல்லை, எல்லாம் அரைகுறை

ஆங்கில ஊடகங்கள் கூட சுத்த ஆங்கிலம் தாங்கி வருகின்றது என சொல்லமுடியாத நிலை இன்று.

அக்காலத்தில் பிரிட்டிசாரிடம் 5ம் வகுப்பு கற்றவர்கள் பேசும் அழகான ஆங்கிலத்தை இன்று பிஎச்டி முடிந்த ஆங்கில பேராசிரியராலும் முடியாது

எங்கள் ஊரில் விசுவாசம் என்றொருவர் இருந்தார், 1930களிலே சிங்கப்பூரின் சாங்கி துறைமுகத்தில் நல்ல வேலையில் இருந்தார், பின் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர் அந்நாட்டை பிடித்தபொழுது ஊர் திரும்பினார், அதன் பின் அங்கு செல்லவில்லை

அதிகம் படித்தவர் அல்ல, ஆனால் மிகசிறந்த ஆங்கிலம் அவருடையது, ” I am going to eat” என்றால் யங்மேன் Eat என்றால் மிருகங்கள் சாப்பிடுவது, “I am going to take the food” என நளினமாக சொல்ல வெண்டும் , அதுதான் ஆங்கிலத்தின் அடைப்படை என்பார்

ஆனால் அந்த ஊரில் அவர் பைத்தியகாரனாக பார்க்கபட்டார், அவர் தகுதிக்கு பேச யாருமில்லை. தங்களை மிக சிறந்த அறிவாளிகளா கருதி மாட்டின் பின்னால் திரிந்தவர்களுக்கு அவர் ஒரு உதவாக்கரையாகவே காணபட்டார்

கோலத்தில் அவரின் அற்புத ஆங்கில அறிவு யாருக்கும் பயன்படாமலே போயிற்று

அற்புதமான ஆங்கிலத்தை அவரிடம் கண்டிருக்கின்றேன், பிரிட்டிசாரிடம் நேரடியாக படித்த சிலரிடம் கண்டிருக்கின்றேன்

அதன் பின் இந்த அம்மையாரிடம் அந்த அழகு ஆங்கிலம் கொட்டி கிடக்கின்றது

பல நேரங்களில் வியப்பாகவும் இருக்கின்றது, யாராவது ஆங்கில நாவலோ அல்லது கட்டுரையோ எழுதினால் இத்தாயினால் பலன் பெறலாம்

மிகசிறந்த பண்பாளரான அவருக்கு இன்று பிறந்தநாள். அந்த தாய் எல்லா வளமும் அருளும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து பல வளங்களை காண பிரார்த்திக்கின்றேன்

இறைவன் அவரை இன்னும் ஆசீர்வதித்துகொண்டே இருக்கட்டும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா Savithri Ramakrishnan