சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

காவல்துறையின் மீது சில சர்ச்சைகள் இருந்தாலும் இப்படி உயிரை கொடுத்து மக்களை காப்பதும் காவல்துறையே, அந்த சில சர்ச்சைகள் கூட அரசியல் அழுத்தமாக இருக்குமே அன்றி இவர்களால் இருக்காது

இதோ ஒரு அதிகாரி குற்றவாளியினை விரட்டும்பொழுது அவனால் சுடபட்டி இறந்துவிட்டார், மிக பெரும் தியாகத்தை செய்து குற்றவாளிகளை அடையாளம் காட்டி சமூக பாதுகாப்பிற்காக உயிர்விட்டிருக்கின்றார்

இவரது தியாகம் மிகபெரிது, இந்த வீரமகனுக்கு வீரவணக்கம்

இந்த காவலரின் கொலை வெளிதெரிகின்றது, அஞ்சலியும் இன்னும் பல விஷயங்களும் நடக்கும், அவர் குடும்பத்திற்கு சில உதவிகளும் கிடைக்கும்

கண்காணும் காவலர்களை போல கண் காணா காவல் தெய்வங்களும் உண்டு, ஆம் இதனை விட‌ உளவுதுறை போலிசார் பணியே பரிதாபத்திற்குரியது

அவர்கள் யாரென்றும் தெரியாது, அவர்கள் செத்தால் அரசு அமைப்பு பகிரங்கமாக சொல்ல கூட முடியாது, அனாதை பிணமாக கிடந்தால் கூட கண்டுகொள்ள மாட்டார்கள்

தாங்கள் யார் என சொல்லமுடியாமலும், அடிபட்டால் ஏன் சுடபட்டால் கூட அமைதியாக சாகவேண்டிய பணி அவர்களுக்கு

அவர்கள் அடையாளத்தை அவர்கள் ஒரு காலமும் காட்டிகொள்ள முடியாது, இவ்வுலகில் தன் அடையாளத்தை இழந்து பல வேடங்களில் அவலமாய் அலையும் வாழ்வு அது

நிச்சயம் கொடுமையான பணிதான், ஒவ்வொரு நொடியும் செத்துபிழைக்கும் பணிதான்

ஆனால் அவர்களின் அந்த தியாக வாழ்வில்தான் இத்தேசம் அமைதியாய் இருக்கின்றது, அவர்களின் சவாலான வாழ்வில்தான் நாமெல்லாம் இயல்பு வாழ்க்கை வாழமுடிகின்றது