ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

Image may contain: 1 person, close-up

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர்

ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டன் பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார்

அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. அதாவது சசிகலா பாணியில் வளைத்தவர் அல்ல. அமெரிக்கா மிகபெரும் தேசம் என்பதால் நிலம் சிக்கலே இல்லை. மக்கள் தொகை குறைவு என்பதால் உழைப்பதுதான் சிக்கல்

அக்காலத்திலே 8 ஆயிரம் ஏக்கரை பராமரித்திருகின்றார் என்றால் பெரிய விஷயம், முன்னாள் ராணுவத்தார் என்பதால் நல்ல மதிப்பும் இருந்திருக்கின்றது

பின்பு பிரிட்டிசார் வரிவசூல் தொடர்பாக கறாராக நடக்க, அவருக்கும் பிரிட்டிசாருக்கும் மோதிற்று, மோதல் யுத்தமானது உள்நாட்டு போர் வெடித்தது

முன்பே பிரிட்டன் ஆர்மியில் இருந்ததால் அவர்களின் பலகீனத்தை நுனியில் வைத்திருந்தவருக்கு வெற்றி குவிந்தது, உச்சமாக பாஸ்டனில் அமெரிக்க பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கபட்டு புரட்சி வெடித்தது, இதற்கு பிரான்ஸ் ஆசியும் உண்டு

அமெரிக்க மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தை மிக வெற்றிகரமாக முன்னெடுத்த சாதனையினை வாஷிங்டன் செய்தார். அவராக படை திரட்டினார் பயிற்சி அளித்தார், பிரான்சின் உதவினையும் பயன்படுத்திகொண்டார்.

அமெரிக்க எழுச்சி அவர் கொடுத்தது.

ஒரே மொழியாக இருந்தால் ஒற்றுமையாக இருக்கலாம், ஒரே இனமாக இருந்தால் வாழ்வாங்கு வாழலாம் என்பதெலலம் சரிவராது

அமெரிக்கர்கள் பிரிட்டன் எனும் தேசிய இனத்து பிள்ளைகள்தான், ஆங்கிலம் பேசியவர்கள்தான், பின் பிரிவும் போரும் எங்கிருந்து வந்தது? மக்கள் அதிருப்தி அடைந்த பின் தேசிய இனமாவது, மொழியாவது?

அமெரிக்க விடுதலைப்போர் அதனைத்தான் சொன்னது, ஒரே மொழி ஒரே இனம் ஆயினும் ஒற்றுமையாய் வாழ்வது கடினம்.

இனி அமெரிக்காவினை ஆளமுடியாது முடிந்தால் வியாபாரம் செய்யலாம் என அமெரிக்காவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு கப்பல் எறியது பிரிட்டன்

அதன் பின் புதிய அமெரிக்காவினை உருவாக்கினார் அவர், இன்றைய அமெரிக்காவின் அடித்தளம் அவர் இட்டது

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

தேர்தலில் அவரே வென்றார், சர்வாதிகாரியாக வாழும் வாய்ப்புத்தான் ஆனால் ஒருவர் இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க கூடாது எனும் சட்டத்தை அவர்தான் எழுதினார், இன்றளவும் அது பின்பற்றபடுகின்றது

உலகம் மன்னர் ஆட்சியில் இருந்தபொழுது ஜனநாயக ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என உருவாக்கி காட்டியவர் அந்த வாஷிங்டன், அவரின் அந்த உருவாக்கமே பின்னர் உலகம் மாறியதற்கு முதல் காரணம்

மனிதர் நல்ல கைராசிக்காரர்

அவர் தொட்டதெல்லாம் துலங்கியிருக்கின்றது. அவர் உருவாக்கிய அமெரிக்கா இன்று மாபெரும் வல்லரசு. அவர் படம் சுமக்கும் டாலர் உலகின் பொருளாதார ரத்தம்

மேலாக அவர் உருவாக்கிய நகரான வாஷிங்டன் இன்று உலக நாடுகளின் தலையெழுத்தை நிர்மானிக்கும் நகரம். ஏறகுறைய ஒவ்வொரு மனிதனின் நிலையினையும் அந்த நகர் நேரடியாக அல்லது மறைமுகமாக தீர்மானிக்கின்றது

அந்த மனிதருக்கு ஜாதகம் அப்படி. அதே நேரம் அவரின் மிக உன்னதமான தியாக உழைப்பும், அவரிடம் இருந்த ஜனநாயகமும் வாழ்த்தபட வேண்டியது

இன்று அவரின் நினைவுநாள் அத்தேசம் அவரை நன்றியோடு நினைத்து வணங்குகின்றது அது வாழும்

இங்கோ ராமசந்திரன் சிலையினை சுற்றி சுற்றி வணங்கி கொண்டிருக்கின்றார்கள், இங்கு எது உருப்படும்?