ஜெயா உடல் நிலை பற்றி உண்மை அறிக்கை வெளியிடவில்லை : அப்பல்லோ அதிபர்
“ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மக்கள் அச்சப்பட கூடாது , சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் என்று அறிக்கை தரப்பட்டது. உண்மை அறிக்கை வெளியிடவில்லை” : அப்பல்லோ அதிபர் பிரதாப் ரெட்டி
அதாவது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை தொடங்கி, ஒவ்வொருவராக சென்று தங்கள் அப்பல்லொ அனுபவத்தை பகிர்வதால் விரைவில் இந்த ரெட்டியும் செல்ல வேண்டும்
அதற்கு முன்பு தன் பாதுகாப்பிற்காக இப்பொழுதே சில விஷயங்களை கசியவிடுகின்றார்
சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று உண்மையினை மறைக்க இவர் யார்? யார் அதிகாரம் கொடுத்தது?
என்னை இந்த அதிகார வர்க்கம்தான் அப்படி சொல்ல சொன்னது என்றாவது சொல்லியிருக்க வேண்டும், அதுவும் இவர் சொல்லவில்லை
எத்தனை அறிக்கைகளை ஒரு முதல்வரின் உடல்நலத்தில் இவர் கொடுத்தார்? அத்தனையும் பொய் எனும்பொழுது இவர் மீது நடவடிக்கை பாயவேண்டாமா?.
இப்பொழுதுதான் ஜெயா மோசமான நிலையில் கொண்டுவரபட்டார் என பேச தொடங்கியிருக்கின்றார், விரைவில் பாருங்கள் மோசமான நிலை என்றால் உயிர் இல்லா நிலை என்ற அளவில் இவர் சொல்லலாம்
நல்ல எதிர்கட்சியும், உண்மையான ஜெயா விசுவாசிகளும், நல்ல மீடியாக்களும் இருந்தால் இந்த ரெட்டியின் பேட்டியினை பெரும் விஷயமாக்கி பல மர்மங்களை உடைக்கலாம்தான்
ஆனால் அப்படி எதுவும் இங்கு இல்லை என்பதுதான் சோகம்…