கொதிநிலையினை எட்டியிருக்கின்றது ஆர்.கே நகர்

மறுபடியும் கொதிநிலையினை எட்டியிருக்கின்றது ஆர்.கே நகர். ஒக்கி புயலை விட வேகமாக பணமழை அடிப்பதாக கடும் விமர்சனங்கள்

இம்முறையும் தேர்தல் ரத்து செய்யபடலாம் எனும் அளவிற்கு நிலமை மோசமாகின்றது

ஒருவேளை ரத்து செய்யபட்டால், அடுத்த தேர்தலை எப்படி நடத்தலாம்

வேட்பாளர்கள் இவர்கள்தான் என அவர்களை காட்டிவிட்டு அத்தோடு அவர்களை அந்தமானுக்கு அனுப்பிவிட்டு, அல்லது தேர்தல் முடியும் வரை நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் வைத்துவிட்டு
ஆர்.கே நகருக்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு , போர்கால நெருக்கடியில் தேர்தல் நடத்தினால் தவிர அங்கு நியாயமான தேர்தல் நடக்காது.

விஞ்ஞான வசதிகள் இல்லா காலத்தில் சில பிரச்சார சலுகைகள் வழங்கபட்டிருக்கலாம்

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திற்கு ஏற்ப தேர்தல் பிரச்சார கட்டுபாடுகளில் பல மாற்றங்கள் வரவேண்டும், இல்லாவிட்டால் இந்த சிக்கல்கள் தீராது

வோட்டு மெஷின் கொண்டு வந்தது போல வேட்பாளர்களுக்கான டிவி கலந்துரையாடல் அல்லது வேறுவடிவில் எல்லா மக்களும் வேட்பாளரின் திறனை, திட்டத்தை அறிந்துகொண்டு வாக்களித்தால் போதுமானது

ஏன் வீடு வீடாக, தெரு தெருவாக வரவேண்டும் . ஏன் இந்த கரகாட்டம், குத்தாட்டம் வால்போஸ்ட் , பேனர் அலப்பறைகள் எல்லாம்?

பேப்பர்லெஸ் பிரச்சாரத்திற்கு முதலில் மாறவேண்டும், இருக்கும் தொழில்நுட்பம் அதற்கு அழகாக உதவி செய்யும்

தேர்தல் கமிஷன் பல அதிரடி கட்டுபாடுகளையும் மாற்றங்களையும் கொண்டுவரவேண்டிய காலத்தை நெருங்கிகொண்டிருக்கின்றது

ஆர்.கே நகர் பிரச்சார இம்சைகள் அதனைத்தான் காட்டுகின்றன‌


முடிந்துவிட்ட வழக்கினை தோண்டி மறுபடியும் கலைஞர் மகள் மீது வழக்கு தொடர்வார்களாம்

வானதி சீனிவாசன் மீதான சர்ச்சைகளை கண்டுகொள்ளவே மாட்டார்களாம்

இதன் பெயர் தான் “புதிய இந்தியா”.


ராகுலின் தலமையில் காங்கிரஸ் பலவீனமாகும் : தமிழிசை கருத்து

ஒஹோ இப்படி சொன்னால் உடனே இவர் தந்தை குமரி ஆனந்தனை காங்கிரஸ் தலைவராக்கிவிடுவார்கள் எனும் கனவா?

ஆனாலும் அக்காவிற்கு ஆசை கொஞ்சம் ஓவர்தான்