ஜெருசலேம் விவகாரம் விஸ்வரூபமாகின்றது

இந்த ஜெருசலேம் நகர் சர்ச்சை பெரும் விவகாரமாகின்றது. இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றன, துருக்கி ,மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் பெரும் எதிர்ப்பு குரலை எழுப்புகின்றன‌

அதிலும் துருக்கி கிழக்கு ஜெருசலேமில் எங்கள் தூதரகத்தை அமைப்போம் என பகிரங்கமாக மிரட்டுகின்றது

ஆனால் இஸ்ரேல் கள்ளசிரிப்பு சிரிக்கின்றது

அதாவது அமெரிக்கா மேற்கு ஜெருசலேமில் தூதரகத்தை திறந்து அதனை இஸ்ரேலிய தலைநகர் ஆக்கினால், கிழக்கு ஜெருசலேமில் துருக்கி தூதரகத்தை அமைத்து அதனை பாலஸ்தீன தலைநகராக்குவோம் என்கின்ற ரீதியில் பேசுகின்றது துருக்கி

பாலஸ்தீனே எங்கள் சுயாட்சி பகுதி, அந்த ஜெருசலேமில் நீங்கள் தூதரகம் திறந்தால் எங்கள் தலைநகரை அங்கீகரித்ததாகவே அர்த்தம் என நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றது இஸ்ரேல்

இது இனி வேறுமாதிரி போகலாம்

அதாவது ஜெருசல்மிற்குள் உலகநாடுகளின் தூதரக தகறாறாக மாறி பின் நாடுகளுக்கு இடையேயான யுத்தமாக வெடிக்கலாம்

இஸ்ரேலோ எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றது, டிரம்பும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இஸ்லாமிய நாடுகளும் விடுவதாக தெரியவில்லை

நிச்சயம் இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்வது அடாவடி. பாகபிரிவினையின் பொழுது ஜெருசலேம் இஸ்ரேலுக்கு கிடைக்கவே இல்லை, ஜெருசலேமில் வழிபாடு செய்யமட்டும் அனுமதிக்கபட்டார்கள்

6 நாள் யுத்தத்தின் பொழுது மோசே தயான், மிக தந்திரமாக அதனை வளைத்துகொண்டு இஸ்ரேலை அதில் நிறுத்தினார்

அன்றிலிருந்து தொடங்கியது சிக்கல், அராபத் முடிந்தமட்டும் போராடிவிட்டு என் கல்லறை கிழக்கு ஜெருசலேமில்தான் அமைய வேண்டும் என சொல்லி தற்காலிக கல்லறையினை ரமலாவில் அமைக்க சொன்னார்

நிலமை மோசமாகிகொண்டே செல்கின்றது.

ஒரு சிலர் சொல்வது போல எங்கள் கண்டுபிடிப்பினை எல்லாம் , முகநூலை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஜெருசலேமினை கேளுங்கள் என வருவதெல்லாம் வதந்திகள். எல்லாம் இந்த பிரிவினை கிறிஸ்தவர்கள் கட்டிவிடும் வதந்தி

நாளையே ஜெருசலேம் இஸ்ரேலிய தலைநகரானால், கிறிஸ்துவின் புனித தலங்களை விட்டுவைக்கவா போகின்றார்கள்? இஸ்லாமின் அடுத்த எதிரி யூதனுக்கு கிறிஸ்தவம்

ஆனால் இந்த பிரிவினைகள் பைபிளை படித்துவிட்டு சொன்னதே சொல்லிகொண்டிருக்கும், சரி அப்படியானால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிவிடலாமா என்றால் அப்பாலே போ சாத்தானே என சபிப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

விஞ்ஞான கண்டுபிடிப்பு எல்லாம் எங்களுக்கு சொந்தம் என எல்லாம் இஸ்ரேல் சொல்லமுடியாது என்பது இஸ்ரேலுக்கு தெரியும்

காரணம் இஸ்ரேலிய யூதர்கள் கண்டுபிடிப்புகளை குவிக்கவில்லை, மேல் நாட்டு கல்வியில் படித்த யூதர்கள் அந்த நாட்டின் சார்பில் செய்த விஷயங்கள் அவை

ஆதலால் இஸ்ரேலுக்கு சொந்தம் என எப்படி கிளம்பமுடியும்? விஞ்ஞான விஷயங்களை கற்றுவிட்டால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்

நாங்கள் கண்டுபிடித்த அணுகுண்டு என அமெரிக்கா சொல்லமுடியுமா? அணுகுண்டு யார் வெடித்தாலும் வெடிக்கும், துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும்

ஜெருசலேம் விவகாரம் விஸ்வரூபமாகின்றது , இப்போதைக்கு இஸ்ரேலிய கோபம் துருக்கி மேல் வந்திருக்கின்றது. இனி துருக்கிக்கு எதிராக என்னவெல்லமோ நடக்கும் வாய்ப்பு உண்டு