வோட்டு மெஷினில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம் : ஹிர்திக் பட்டேல்

வோட்டு மெஷினில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம் : ஹிர்திக் பட்டேல்

அப்படி நடந்திருந்தால் காங்கிரஸ் இத்தனை தொகுதிகளை பெற்றிருக்க முடியுமா? நிச்சயமாக இல்லை

பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதற்கு நிச்சயம் வோட்டு மெசின் காரணம் அல்ல, அவை எல்லாம் அபத்தமான குற்றசாட்டு

மக்கள் பெரும் அதிருப்தி அடையவில்லை அதனால் பாஜக அரசினை தொடர அனுமதித்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.

சொந்த சாதிக்காரன் 4 பேரை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டால் இவர் என்ன தியாகி ஆகிவிடுவாரா? இவர் சொல்வதெல்லாம் வேதம் ஆகுமா?

இந்த காங்கிரஸிடம் பிடிக்காத விஷயங்கள் இதுதான், இப்படித்தான் பாஞ்சாபில் பிந்த்ரன் வாலேயினை உருவாக்கி நாசமாய் ஆக்கினார்கள்

தமிழகத்தில் ராமசந்திரனை உருவாக்கி மாநிலத்தை நாசமாக்கினார்கள்

கொசுவென நசுக்கி இருக்க வேண்டிய பிரபாகரனை பெரும் பிம்பமாக்கி பின் அதற்கான விலையினை கொடுத்தார்கள்.

இந்த ஹிர்திக் பட்டேலை வைத்து குஜராத்தினை நாசமாக்க முனைந்தார்கள், நல்ல வேளையாக குஜராத் மக்கள் அதனை அனுமதிக்கவில்லை

இதோ பிஜேபியும் அடிமைகளை 
உருவாக்குகின்றது, யாரை உருவாக்குகின்றது?

பன்னீரையும் பழனிச்சாமியினையும் உருவாக்கிகின்றது

இவர்களால் யாருக்காவது சிக்கல் வருமா? அடுத்த தேர்தலில் எங்கிருப்பார்கள் என தெரியுமா?

அதனால் உறுதியாக சொல்லலாம், பினாமிகளை உருவாக்குவதில் பாஜக பாணியே சிறந்தது அல்லது பாவம் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.


மூச்சுத் திணறித்தான் பா.ஜ.க. வெற்றி! தி.க. தலைவர் கி.வீரமணி கருத்து

அவர்கள் எப்படி வென்றால் என்ன? 1 வோட்டு வித்தியாசம் என்றாலும் வெற்றி வெற்றிதான் ஒரு மில்லி செக்கெண்ட் தாமதமாக‌ வந்தாலும் ஓட்டபந்தயத்தில் வெற்றி போனது போனதுதான்.

அவர்கள் மூச்சு திணறித்தான் வென்றார்கள் என மூச்சிறைக்க சொல்லும் வீரமணி, ஆர்.கே நகரில் வெல்லபோவது யார் என சொல்லட்டும் பார்க்கலாம்