பிட் காயின் என்றால் என்ன ?
ஒரு வழியாக இந்தியா பிட்காயின் விவகாரத்தில் விழித்துகொண்டு நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது
அதாகபட்டது “பிட் காயின்” என்பது பிட்டு படம் பார்க்க கொடுக்கும் காயின் அல்ல, இது பண புழக்கத்தின் விஞ்ஞான வடிவம்
பிட் காயின் என்றால் என்ன என்றால் இப்படி விளக்கலாம்
உங்களிடம் உள்ள பணத்தினை பிட் காயின் போன்ற இணைய பணவர்த்தனை நிறுவணங்களிடம் முதலீடு செய்யலாம், அவர்கள் புள்ளிகளை தருவார்கள் அந்த புள்ளிகளை வைத்து உலகில் எது எல்லாம் இணையம் வழி கிடைக்குமோ அதெல்லாம் வாங்கி குவிக்கலாம்
டிஜிட்டல் கரன்சி எனும் வகையில் வந்து இன்று உலகெல்லாம் அரசுகளை அச்சுறுத்தும் விஷயம் இது
கருப்பு பணத்தினை எதில் முடக்கலாம்? சொத்துகள் என்றால் அரசு விடாது. தங்கம் என்றாலும் பூதம் போல் காக்க வேண்டும், பினாமிகளை நம்ப முடியாது கஞ்சா கேஸ் போட்டு மிரட்ட எல்லோரும் ஜெயா அல்ல
ஆக பெரும் பணக்காரர்களுக்கு வரபிரசாதமாக கிடைத்திருப்பது இவ்வகை நிறுவணங்கள், பிட் காயின் என்பது அதில் ஒன்று அது போக இன்னும் ஏராளமான நிறுவணங்கள் இணையத்தில் சுற்றுகின்றன
இருக்கும் பணத்தை குவிக்கலாம், அதுவாக வளரும். வெறுங்கையோடு உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம் , சொத்து வாங்கலாம், உல்லாச வாழ்க்கை வாழலாம், கையில் எதுவும் எடுத்து செல்லும் அவசியமில்லை
உங்களிடம் எவ்வளவு சொத்து இருக்கின்றது என யாருக்கும் தெரியவும் தெரியாது, பிட் காயின் நிறுவணங்களை தவிர
பிட்காயின் வளர்ச்சியும் அபாரமானது, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடி முதலீடு செய்தவர்கள் இன்று 140 கோடி அளவு மதிப்புள்ள புள்ளிகளோடு சுற்றுகின்றார்கள், அந்த அளவு வேகமான வளர்ச்சி, 140% வளர்ச்சி
எப்படி முடிகின்றது? என்ன மாதிரி பண சுழற்சி என்பதெல்லாம் தெரியவில்லை. வியாபாரம் மேற்கத்தியர் ரத்தத்தில் ஊறியது, அதில் விஞ்ஞானமும் கலந்துவிட்டால் என்னாகும்?
அதேதான் காலம் அவர்கள் முன் கட்டுபட்டு நிற்கின்றது
பேஸ்புக், டிவிட்டரை விட பெரும் சொத்துக்களுடன் பிட்காயின் திகழ்கின்றது, ஸ்பெக்ட்ரம் பணத்தை கிட்டதட்ட சில பில்லியன் டாலர்களில் பெருக்கினால் ஓரளவு அதன் சொத்து மதிப்பினை நெருங்க முடியும், அப்படி குவித்து வைத்திருக்கின்றது
ஒரு பிட்காயின் விலை இன்றைய இந்திய மதிப்பில் கிட்டதட்ட 15 லட்சம் ரூபாய், வாங்கி போட்டால் இன்னும் கொஞ்ச நாளில் 50 லட்சம் வரை போகலாம்
ஆக ஒரு காயினை 15 லட்சத்திற்கு வாங்கி, 30 லட்சத்திற்கு விற்றால் கூட 15 லட்சம் லாபம், இந்த 15 லட்சம் கரன்சி வியாபாரம் என்றால் அரசுக்கு வரி உண்டு, டிஜிட்டல் கரன்சி என்றால் எப்படி வரி வசூலாகும்?
ஒரு காயினுக்கே இப்படி என்றால் ஏராளமான காயின்கள் புழங்கினால் என்னாகும்? எவ்வளவு பெரிய பண புழக்க முடக்கம்? வரி இழப்பு?
இப்படி கருப்பு பண பதுக்கலின் சொர்க்கமாக இந்த நிறுவணங்கள் இருப்பதால் அரசுக்கு பெரும் சிக்கல்
இந்தியா இதில் விழித்துகொண்டு, பிட்காயினில் முதலீடு செய்திருப்பவர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பியிருக்கின்றது
இது எந்த அளவு பலன் கொடுக்கும் என தெரியவில்லை, காரணம் சுவிஸ் வங்கிகணக்கே வெளிவரா நிலையில் பிட்காயின் சமாச்சாரங்கள் எப்படி வரும்?
ஆனாலும் இந்திய அரசு கண்காணிப்பில் இறங்கி இருப்பது நல்ல விஷயம், இது பல நாட்டு அரசுகள் சம்பந்தபட்ட விஷயம் என்பதால் ஓரளவு பலன் கிடைக்கலாம்
நிச்சயம் பிட் காயின் தொழில் கள்ளதனம் அல்ல, பங்கு சந்தை போன்றதுதான், ஆனால் அதில் சம்பாதிப்பவர்கள் வருமானவரி கட்டுகின்றார்களா? கறுப்பு பணம் அல்லது கறுப்பு டிஜிட்டல் புள்ளிகள் வைத்திருக்கின்றார்களா என்பதுதான் சிக்கல்
இப்பொழுது விசாரணை தொடக்கமாம், தமிழகத்திலும் உண்டாம்.
தமிழகத்தில் யாரெல்லாம் சிக்குவார்களோ தெரியாது, ஆனால் சொல்லமுடியாது ஒரே நாளில் 200 ரெய்டுகளை நடந்த தமிழகம் இது, இங்கு பிட் காயின் விசாரணை என்பது ஆச்சரியமில்லை
நெருப்பில்லாமல் புகையாது அல்லவா? யாருக்கோ குறி வைக்கின்றார்கள், பார்க்கலாம்
என்ன இருந்தாலும் தமிழர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள், அதுவும் தேர்தல் வசூலில் கை தேர்ந்தவர்கள்
ஆர்.கே நகரில் விட்டிருக்கலாம், ஆனால் அடுத்த தேர்தலில் பிட் காயின் தந்தவனுக்கே ஓட்டு என நிச்சயம் கிளம்புவார்கள் பாருங்கள்
அருமையான கட்டுரை. மேலும் பிட்காயின் பற்றி நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தின் லிங்க்கை கொடுத்துள்ளேன். பயன்படுத்திக் கொள்ளவும். https://amzn.to/2OYGyT7