தூக்கு தண்டனை என்பது அரசே செய்யும் கொலை : கவுசல்யா சங்கர்

தூக்கு தண்டனை என்பது அரசே செய்யும் கொலை, அது கூடாது : கவுசல்யா

அரைகுறை போராளி எப்படி இருப்பார்கள் என்றால் இப்படித்தான்

கொல்லபட்ட கணவனுக்கு நீதிவேண்டும் என கொடிபிடித்தவரும் இவர்தான், இப்பொழுது தந்தைக்கு தூக்கு என்றவுடன் தூக்கு வேண்டாம் என்பவரும் இவர்தான்

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள், எதுவும் ஆடட்டும் அது அவர் விஷயம்

ஆனால் என்ன சொல்ல வருகின்றார் அம்மணி? கணவன் கொல்லபட்டது குற்றமாம், ஆனால் குற்றவாளி தூக்கில் போடபட கூடாதாம்

அப்படியானால் சிறையா? இதற்கு அவர்களை ஊட்டிபக்கம் ஒரு வீட்டில் வைத்து பொங்கி போட்டு பார்த்தால் போதாதா?

பின் எதற்கு இத்தனை ஆர்பாட்டம் இந்த அம்மணி செய்தது?

ஆக நடந்தது ஏதோ அவர் குடும்ப சண்டை போலவும், சங்கர் கொல்லபட்டான் என ஒப்பாரி வைப்பதும், தந்தைக்கு தூக்கு வேண்டாம் எனவும் பேசிகொண்டிருக்கின்றார்

இது சமூகம், நடந்திருப்பது சமூகத்தினை தலைகுனிய செய்த, அச்சுறுத்திய படுகொலை இதில் சட்டம் தன் கடமையினை செய்திருக்கின்றது.

தன் பாதிரி கணவனை எரித்த மதவெறியர்களை அந்த ஸ்டெயின்ஸின் மனைவி மன்னித்ததும், தன் கணவனை கொன்ற கொலையாளிகளுக்கு தூக்கு வேண்டாம் என சோனியா சொன்னதும் வேறு வகை

ஆனால் குற்றம் சாட்டி இவர்கள்தான் கொலையாளிகள் என பிடித்து கொடுத்த கவுசல்யாவே பின் வாங்குவது வேறு வகை

ஆக இந்த கவுசல்யா விவகாரம் சொல்வது ஒன்றுதான்

“வாலிபர்களே, பெண்களுக்காக சாகும் அளவு செல்லாதீர்கள், அவர்கள் மனம் சூழலுக்கு ஏற்ப வளைய கூடியது, தந்தையின் மீதான பாசம் அவர்கள் அடிமனதில் ஒட்டிகொண்டே இருக்கும்.

அவர்களுக்காக நீங்கள் செத்துபோவது அர்த்தமே இல்லாத விஷயம்..”

யூதபழமொழி இப்படி சொல்கின்றது

“ஒரு பெண்ணுக்கு ஒருநாளும் அடிமையாகதே, அவள் மனம் புரிந்து கொள்ளமுடியாதது , அவளால் உன் வாழ்வு திசைமாறும், கழுத்துக்கே கத்தி வரும்..”