கிறிஸ்மஸ் அன்று புத்தாண்டு தினத்தன்று தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம்

உலகமெல்லாம் பெரும் அச்சுறுத்தலான செய்திகள் வருகின்றன, கிறிஸ்மஸ் அன்று புத்தாண்டு தினத்தன்று தாக்குதல் நடத்த ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் வெறிபிடித்து அலைகின்றது

ரஷ்யாவினை தொடர்ந்து பிரிட்டனிலும் தாக்குதல் முறியடிக்கபட்டுள்ளது எனினும் இது திசை திருப்பும் முயற்சியா? வேறு திட்டமா? என ஒவ்வொரு நாடும் பதற்றத்தில் இருக்கின்றது

ஜெருசலேம் விவகாரம் முதல் பல விவகாரங்களுக்காக உலகெங்கும் அமெரிக்க, இஸ்ரேலிய தொழில் நிலையங்கள் , ஹோட்டல்கள், தூதரங்கள் தாக்கபடலாம் எனும் எச்சரிக்கை ஒலிக்கின்றது

ஒவ்வொரு நாட்டு உளவுதுறையும் தூக்கம் மறந்து நிற்கின்றன, காவல்துறை கடும் பரபரப்பாக இருக்கின்றது ஈ காக்காவினை கூட விடாமல் சோதிக்கின்றது

இந்தியா ஒன்றும் தீவிரவாதிகள் இல்லக்கில் இல்லாத நாடு அல்ல, மிக பெரும் அடிகளை வாங்கியிருக்கின்றோம்

ஆனால் உலகமே பதற்றபடும்பொழுது இந்தியா மகா சந்தோஷமாக குஜராத் வெற்றியினை கொண்டாடுகின்றது, தமிழக காவல்துறை ஆர்.கே நகரில் குவிந்து நிற்கின்றது

இவை எல்லாம் நல்ல அறிகுறிகள் அல்ல. தீவிரவாதிகளுக்கு அழிக்க மட்டுமே தெரியும் , அந்த வெறியுடன் சின்ன இடைவெளி கிடைத்தாலும் தவற விடமாட்டார்கள்

எல்லோரும் விழிப்பாய் இருப்பது நல்லது.