கச்சதீவு விவகாரத்தில் என்ன நடந்தது?
கச்சதீவினை இந்தியா ஏன் கொடுத்தது என பலர் பொங்குகின்றார்கள், வழக்கமாக பொங்குபவர் யாரென்றால் சீமான் கோஷ்டி. மற்றபடி அதிமுக திமுக இரண்டும் மாறி மாறி குற்றம் சொல்லும் ஆனால் டெல்லியிடம் மண்டியிட்டு நின்றுகொள்ளும்
உண்மையில் கச்சதீவு விவகாரத்தில் என்ன நடந்தது?
கச்சம் என்றால் ஆமை, ஆமைகள் மட்டும் ஒதுங்கும் தீவு அது, மனிதர்கள் வாழமுடியா தீவு. இலங்கை மற்றும் தமிழக மீணவர்கள் வலைகளை உலர்த்தி இளைப்பாறும் இடம் அது. மீணவர்களுக்கு காவலான புனித அந்தோணியார் ஆலயம் 100 வருடங்களுக்கு முன்பே அங்கு கட்டபட்டும் இருந்தது
கட்டியது தமிழர்கள்தான், ஆனால் நிர்வாகம் யாழ்பாண ஆயரிடம் சென்றுவிட்டது, அது வேறு விஷயம்
கச்சதீவு சிக்கல் எப்பொழுது உதித்தது என்றால் கடத்தல்கள் அதிகரித்தபொழுது இருநாட்டு தலைவலி ஆனது. இந்திய பிரதமர் அலுவகத்தின் கீழ் உளவுதுறை வரும் அல்லவா? தமிழகத்திலும் உளவுதுறை அறிக்கைகள் பிரதமருக்கு செல்லும் அல்லவா? அப்படி சென்றுகொண்டே இருந்தது
பல விஷயங்கள் ரகசியமானவை, அப்படி அந்த அறிக்கைகளும் ரகசியமாயின
1974 வரை இந்த சிக்கலை எப்படி கையாள்வது என தெரியாமல் இருந்த இந்தியாவிற்கு, விஷயம் வங்கப்போர் மூலம் வந்தது
எப்படி வந்தது?
ஒரு பெரிய வணிக வளாகம் சரவணா ஸ்டோர் போல இருந்தால் அதன் அடுத்த கட்டிடத்தில் ஒண்டிகடை வைத்திருக்கும் வியாபாரி திக்தெக்கென்று இருப்பான், காரணம் பெரியவன் எப்பொழுது அபகரிப்பான் என தெரியாது
ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் அருகில் 2 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் நிலையும் அதுவே
அப்படி பெரிய நாடுகள் அருகில் இருக்கும் சிறிய நாடுகள் மகா எச்சரிக்கையாயிருக்கும் அது ஜப்பானோ, தைவானோ, கியூபாவோ எதுவானாலும் ஒரு விழிப்பு இருக்கும்
இலங்கைக்கும் அது இருந்தது அதனால் எப்பொழுதும் இந்தியாவினை எச்சரிக்கையோடே பார்த்தது. 1971ல் நடந்த வங்கப்போரில் பாகிஸ்தானை வலிய அழைத்து, உங்கள் விமானங்களை இங்கே இறக்கலாமே என்றது
காரணம் பாகிஸ்தானிய விமானம் வந்தால் தென்னிந்தியாவினை தாக்கும் தமிழர்கள் அழிந்தால் தனக்கு பின்னாளில் நல்லது என கணக்கு எல்லாம் போட்டது
அதற்குள் யுத்தம் முடிந்தாலும் இந்திராவின் கோபபார்வை அதன்மீது படிந்தது. இந்திரா மிகபெரும் ராஜதந்திரி எனினும் காலம் பார்த்தார்
காரணம் வங்கத்தேசத்தை பாகிஸ்தானை பிளந்து எடுத்ததில் உலகம் இந்தியாவினை ஒருமாதிரி பார்த்துகொண்டிருந்தது, பொருளாதார தடை எல்லாம் தயாரான நேரம்
அதனால் இலங்கையினை அடிக்கவோ பகைக்கவோ விரும்பவில்லை, அதற்கும் மேலாக அணுகுண்டு சோதனை வேறு செய்யவேண்டும்
அணுசோதனை செய்ய அண்டைநாடுகள் ஒத்துழைப்பும் அவசியம் இல்லைஎன்றால் தென்கொரிய வடகொரிய முறுகல்தான்
பாகிஸ்தானை விடுங்கள், ஆனால் அதற்கு ஆதரவாக இந்திய அண்டை நாடுகள் குரல்கொடுக்காதவாறு பார்த்துகொள்ளவேண்டும் எனும் தந்திரம் இருந்தது
நேபாளம், பூட்டான், வங்கதேசம், மாலத்தீவு என எல்லா நாடும் அன்று நம்பிக்கைகுரியது, இலங்கை சந்தேகத்திற்குரியது. இந்திய அணுஆயுதத்தால் எங்களுக்கு ஆபத்து என இலங்கை அலறினால் மறுநிமிடம் உலக படைகள் அங்கு குவியும், குறிப்பாக திரிகோணமலையில் குவியும்
இதனை மனதில் வைத்துத்தான் இலங்கை வாயினை அடைக்க எண்ணி தன் வகுப்பு தோழியான ஸ்ரிமாவோவுடன் உறவுபாராட்டி, எப்படி தீர்க்கலாம் என தலையினை பிய்த்த கச்சதீவினை இலங்கைக்கு கொடுத்தார் இந்திரா
ஸிரிமாவோவும் ஒரு யானைகுட்டியினை பரிசளித்தார். இரு நட்புநாடுகளின் உறவில் இந்திய அணுகுண்டு சோதனைக்கு இலங்கையிடம் இருந்து எதிர்ப்பில்லை
சாம, பேத, தான, தண்டம் என்பார்கள் அல்லவா? இலங்கையிடம் சாம, பேத முறைகளில் நேரு தோற்றிருந்தார், தான முறையில் கச்சதீவினை இந்திரா கொடுத்து பார்த்தார்
கச்சதீவினை கொடுத்தாரே அன்றி தமிழக மீணவர்கள் மீன்பிடிக்க முழு உரிமையினை அவர் காத்தார், பின் சிக்கல் வந்ததென்றால் புலிகள் கால கடத்தலும் அதன் பின்னும் தொடரும் கடத்தலே காரணம், சமீபத்தில் கூட தூத்துகுடியில் கடத்த இருந்த ஹெராயின் பிடிபட்டது நினைவிருக்கலாம்
சாம பேத தான எனும் முறையினை கையாண்டு இறுதியாக
தண்டம் எனும் வழியில் போராளிகளை வளர்த்தார் இந்திரா அத்தோடு அவர் காலம் முடிந்தது
ஆனால் கச்சதீவு சிக்கல் புலிகளால் விஸ்வரூபமெடுத்தது புல்கிகளின் கடத்தலை தடுக்கின்றோம் என கிளம்பிய இலங்கை படை சுட தொடங்கியது, அதுவும் ராஜிவ் கொலைக்கு பின் பிரச்சினை பெரிதானது
கடத்தல் நடந்ததற்கு ஆதாரம் உண்டா என கேட்டால், குட்டிமணி தங்கதுரை கொழும்பு கோர்ட்டிலே எம் தொழில் கடத்தல் என்றார்கள்
ராஜிவ் கொலையாளி சிவராசன் எல்லாம் கடத்தல் தங்கத்துடன் கள்ளத்தனமாகத்தான் வந்தார்கள்
இப்படியாக கச்சதீவு சர்சைகள் ஏராளம், எனினும் அங்கு மீன்பிடிக்கும் உரிமை இந்திய மீணவர்களுக்கு உண்டு. அதனை பல காரணங்களால் இந்திய அரசு மீட்கவில்லை
இலங்கை கடற்படை சுட்டால் இந்திய கடற்படை பாயும், ஆனால் அங்கு ஏதோ மர்மமும் அரசுகளுக்கு இடையேயான அரசியலிலும் பல விஷயங்கள் மர்மமாகின்றன
ஆக கச்சதீவு கைமாறிய கதையும், அது சர்ச்சையான கதையும் இதுவேதான்
இதில் சோனியா அரசு என்ன செய்தது என கேட்டால், அது புலிகளை விடவும் முடியாமல், ஏற்றுகொள்ளவும் முடியாமல் தடுமாறியது. இதனால் பல சிக்கல்கள் உருவாயின .
இன்னொன்று கூட்டணி அரசு என்பதால் ஏக சிக்கல்கள்
நிச்சயமாக இந்திரா காலத்திற்கு பின் மிக பெரும்பான்மையில் வந்திருப்பது மோடி அரசு. ஆனால் அதுவும் பல காரணங்களால் தவிக்கின்றது
அதனால் சொல்கின்றோம் இந்திரா கச்சதீவினை கொடுத்ததில் ஏகபட்ட விஷயங்கள் உண்டு, சும்மா கொடுத்துவிடவில்லை, அதில்நாட்டு நலனும் இருந்தது
இப்படியெல்லாம் நாட்டிற்காக பாடுபட்டு உயிர்நீத்த தலைவியினைவிட மோடி உயர்ந்தவர் என்றால் எப்படி ஏற்றுகொள்ள முடியும்?
எங்கே மோடி மகா திறமைசாலி என்றால் , ஹம்பாந்தோட்டாவினை விட்டு சீனாவினை விரட்டட்டும் பார்க்கலாம்