சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள்
நீங்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கின் விடுதலையினை பார்க்கின்றீர்கள், நாங்கள் சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள்
சாதிக் பாஷா சாவில் மட்டும்தான் நீதி வேண்டுமா? இந்த ஜெயா என்றொரு முன்னாள் முதல்வர் சாவிலே மர்மம் இருக்கின்றதே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டால் ஒரு பயலையும் காணவில்லை
இப்படி அழுகின்றவன் என என பார்த்தால் பெரும்பாலும் தும்பிகள்தான்
சென்னையில் பத்ம்பநாபாவோடு செத்தது 14 பேர், கொன்றது புலிகள். தப்பி செல்லும் பொழுது காவலரை வேறு சுட்டான் சிவராசன்
ராஜிவோடு செத்தது 17 பேர், புலிகளை தேடும்பொழுது தமிழகத்தில் தற்கொலை செய்த புலிகள் 25 பேர், வழக்கு விசாரணை என வாழ்வை தொலைத்த தமிழர் ஏராளம்
அது போக இவர்கள் வைத்த ஒப்பாரியில் முத்துகுமார் போன்ற வகையில் செத்தது கிட்டதட்ட 15 பேர்
இது போக இன்னும் ஏராள கணக்கு உண்டு, அதில் சீமானுடன் இருந்த ஈழத்திற்கு எல்லாம் சென்றுவந்த முத்துகுமார் என்பவர் கொலையும் ஒன்று, இன்றுவரை அது மர்மமமே
இங்கு இப்படி என்றால் இலங்கையில் நடந்த கொலைகள் சொல்லி மாளாது, ஒவ்வொரு தமிழனும் நேரடியாக அல்லது மறைமுகமாக புலிகளால் மனதார அல்லது உடலால் செத்திருக்கின்றான்
அதில் எல்லாம் வராத அழுகையும் கண்ணீரும் கவலையும் இவர்களுக்கு சாதிக்பாஷா மீது மட்டும் பொத்துகொண்டு வருமாம்..
2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி! எதிர்க்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல நினைக்கவில்லை? – டிடிவி தினகரன்
எங்கள் நிலை, எங்கள் சித்தி நிலை எதிர்கட்சிக்கும் வேண்டாம் என நினைக்கும் உமது மிகபரந்த மனதிற்கு நீங்கள் ஆர்.கே நகர் தவிர வேறு எங்காவது வெல்ல வாழ்த்துக்கள்
அப்படி திடீரென போன் பழுதாகிவிட்டதில் நண்பர்களின் எண்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது, யாரேனும் நட்பை தொடர விரும்பினால் வாட்சப் என்பதில் ஒரு ஹாய் சொல்லவும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது.
சனியன் ஒழியட்டும் என கருதினால் சொல்ல வேண்டாம்