போபர்ஸ் பீரங்கி ஊழல் என சொல்லபட்டதில் என்ன இருந்தது?

Image may contain: 1 person, close-up

இந்த ஸ்பெக்ட்ரமிலாவது சில குற்றசாட்டுக்கள் இருந்தன, இவர்கள் எல்லாம் பலன் பெற்றிருக்க கூடும் என சிபிஐ சந்தேகித்தது. வலுவில்லாதது எனினும் ஒரு சில ஆதாரங்களாவது இருந்தது

ஆனால் போபர்ஸ் பீரங்கி ஊழல் என சொல்லபட்டதில் என்ன இருந்தது? ஒன்றுமே அடிப்படை ஆதாரமில்லை எல்லாமே கற்பனையில் சொல்லபட்ட விஷயங்கள்

அதற்குத்தான் பெரும் புயல் வீசியது, தன் கரங்கள் சுத்தமானது என நிரூபிக்க படாதபட்ட ராஜிவ் அதில் சிக்கி இறந்தும் போனார். ஆயுத பேரத்தில் ஈடுபட்ட தரகர்கள் தாங்கள் சிக்கபடுவோம் என அஞ்சி ராஜிவ் கொலைக்கு துணைபோன கொடுமையும் உண்டு

இல்லாத பொய்யினை சொல்லி 66 கோடி ரூபாய் ஊழல் என ராஜிவினை இந்த எதிர்கட்சிகள், குறிப்பாக பாஜக , கம்யூனிஸ்டுகள் படுத்தியபாடு கொஞ்சம் அல்ல‌

இன்று ஆர்.கே நகரிலே நூற்றுகணக்கான கோடி புரள்கின்றது என்கின்றார்கள், சத்தமே இல்லை

66 கோடி ராஜிவ் பெற்றார் என அபாண்டமாக சொன்னவர்கள்தான்,இன்று ரபேல் விமானத்தில் பல நூறு கோடி சர்ச்சைகளை சுமந்துகொண்டிருந்தாலும் முதலை போல மகா அமைதியாக இருக்கின்றார்கள்

அன்று ராஜிவிற்கு எதிராக குதித்தவர்கள், இன்று ரபேல் கொள்ளையில் மகா அமைதி

அந்த போபர்ஸ் வழக்கில் பொய்யான சதிகளை செய்து , கற்பனைக்கு இறக்கைகட்டியவர்கள்தான் இன்று ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பில் பல்லை கடித்துகொண்டிருக்கின்றார்கள்

உண்மையில் அன்று ராஜிவிற்கு நிகழ்ந்தது மிகபெரும் அநீதி.

இதெல்லாம் காங்கிரஸ்காரன் சொல்ல வேண்டியது. அவன் என்ன செய்கின்றான் என்றால் கனிமொழிக்கும், ராசாவுக்கும் வாழ்த்து மழை பொழிந்துகொண்டிருக்கின்றான்