இந்த ஜெருசலேமினால் எவ்வளவு சர்ச்சைகள்?
இயேசு பிறந்த பெத்லகேம் இன்று பாலஸ்தீனத்தில் உள்ளது எனினும் அங்கு கிறிஸ்மஸ் கொண்டாட தடையில்லை. அவர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலில் சிறப்பு வழிபாடுகள் எல்லா காலமும் நடைபெறும்
ஆனால் இம்முறை ஜெருசலேம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிப்பதால் வழக்கமான கொண்டாட்டத்தை பாலஸ்தீனில் கொண்டாடமாட்டார்களாம், ஆனாலும் அந்த கிறுக்கு டிரம்ப்தான் மோசம், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் எல்லாம் நமக்கு ஆதரவுதான் ஆக கொண்டாடலாம் என ஒரு பிரிவு சொல்கின்றது
இந்த ஜெருசலேமினால் எவ்வளவு சர்ச்சைகள்?
முதலில் நெபுகாத் நேச்சர் என்பவர் அதனை பிடித்தான், முழுக்க பாபிலோன் அரசுமயம் ஆக்கினான், சாலமோன் கோவில் இடிக்கபட்டது
அதன் பின் அலெக்ஸாண்டர் காலத்தில் அங்கு கிரேக்க ஆலயம் எல்லாம் நிறுவபட்டு அது கிரேக்க நகர் ஆகியிருக்கின்றது
ஆனாலும் ஆயிரம் வருடம் கழித்து பின்பு ஏரோது காலத்தில் கோவில் கட்டி அசத்தியது யூத இனம், ஜெருசலெம் அவர்களுக்கு ஆனது
பின்பு இயேசு கொல்லபட்டு, ரோமரை எதிர்த்து கலகம் செய்து ஏரோது ஆலயமும் இடிக்கபட்டு விரட்டபட்டது யூத இனம்
பின் ஜெருசலேம் கிறிஸ்தவர்களுக்கா? இஸ்மாயிருக்கா எனும் சிலுவை போர்களில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் மாறி மாறி ஜெருசலேமினை பிடிக்க தள்ளி இருந்து அழுதது யூத இனம்
ஆம் எங்களுக்கு சொந்தமான பூமிக்கு இரு இனங்கள் மோதிகொள்வதா என அவர்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள்
மாவீரன் நெப்போலியன் யூதர்களுக்கு தனிநாடு கொடுக்கும் அளவு வந்தாலும் விதி அவனுக்கு ஒத்துழைக்கவில்லை
பின் ஹிட்லர் காலத்தில் அடிபட்டு பின் வந்த யூத இனமும், அதற்கு முன்பே நில வங்கி, கிபூட் எல்லாம் நடத்திய யூதர்களும் இணைந்து இஸ்ரேலை சாத்தியபடுத்தினர்
அப்பொழுதும் ஜெருசலேம் அவர்களிடம் இல்லை
இதோ இப்பொழுது கைகெட்டும் தூரத்தில் ஜெருசலேம் வந்தாயிற்று
நெபுகாத் நேச்சர், அலெக்ஸாண்டர், ரோமர், கலீபாக்கள் துருக்கி ஓட்டோமான்கள், நெப்போலியன், ஹிட்லர் என எத்தனையோ பெரும் சக்திகளை கிட்டதட்ட 3 ஆயிரம் ஆண்டுகளாக கடந்து வந்து இன்று ஜெருசலேமினை மறுபடியும் பிடித்துவிட்டார்கள் யூதர்கள்
இது உலகில் எந்த இனத்திற்கு சாத்தியம் என நினைக்கின்றீர்கள்?
மதுரையில் ஹேமநாதபாகவதரை தோற்கடித்த பாணபுத்திரர் என்பவருக்கு பாண்டிய மன்னன் கொடுத்த நிலமோ, அல்லது ராஜ ராஜ சோழனின் நன்கொடை பூமியோ எங்கிருக்கின்றது என யாருக்காவது தெரியுமா?
2000 ஆண்டுகளாக ஒரு போராட்டத்தை எப்படி தொடர்வது என்பதை உலகிற்கு சொல்ல யூதர்களை விட்டால் யாரை சொல்வது?