அதிமுகவின் சொத்து குவிப்பினை கண்டு கொள்ளாமல் இருந்தது திமுக-தானே?

ஆர்.கே நகரில் தினகரன் பெரும் பணம் கொடுத்துவிட்டார் என திமுக புலம்பிகொண்டிருக்கின்றது

தினகரன் என்ன அண்ணமலை செட்டி வம்சமா? இல்லை ஐதரபாத் நிஜாம் வகையறாவா? இல்லை யூதனை போல உலகளாவிய தொழில் செய்தவரா?

1989வரை அந்த குடும்பத்திடம் சல்லி காசு கிடையாது, 1991க்கு பின் குவித்தார்கள், அதன் பின் வந்த திமுக என்ன செய்தது? வோட்டு ரீதியாக அவர்களை முடக்கும் வேலை செய்தார்களே ஒழிய சசிகலா குடும்ப சொத்துக்களையோ அது பெருகும் விதத்தையோ கட்டுபடுத்தவே இல்லை

அவர்களை கூண்டோடு ஒழிக்கும் அதிகாரமும், வாய்ப்பும் திமுகவிற்கு இருந்தது, ஆனால் செய்யவில்லை ஏன்?

சசிகலா குடும்பம் பணமின்றி முடங்கினால் அதிமுக அரசியல் எடுபடாது, அந்நேரத்தில் இன்னொரு தேசிய கட்சி அல்லது வேறுகட்சி எழும்ப நேரிடும் என்று கணக்கிட்டு கண்டுகொள்ளாமல் இருந்தது திமுக‌

பின்னர் திமுக அதிமுகவின் சொத்துகுவிப்பினை கண்டுகொள்ளாமல் இருப்பதும் , மிடாஸ் போன்ற ஆலைகள் தடையின்றி நடைபெறவும் மவுனமாக அனுமதித்தது

அதிமுகவும் சில மவுன சிக்னல்களை கொடுத்தது, திமுகவினர் மதுபான ஆலைகள், பல்கலைகழகம் எல்லாம் தடையின்றி நடந்தன‌

இரு பக்க்கமும் பணம் குவித்தார்கள், பணத்தாலே வோட்டு வாங்க முடியும் என மனமார நம்பினார்கள். இன்னொரு கட்சி எழும்பா வண்ணம் இருவருமே காய் நகர்த்தினார்கள்

அதில் மூப்பனார், விஜயகாந்த் என எத்தனையோ கட்சிகள் நசுக்கபட்டன‌

இப்படி எல்லாம் சசிகலா குடும்பம் சொத்துகுவிக்க, அது மாநில அரசியலுக்கு நல்லது என தொலைதூர கணக்கிட்ட திமுகதான் இன்று வோட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என ஒப்பாரி வைக்கின்றது

பணம் எங்கிருந்து வந்தது என யாராவது சொல்வார்களா? சொல்லவே மாட்டார்கள்

இப்பொழுது தினகரன் கோஷ்டி என்ன செய்துகொண்டிருக்கும் என நினைக்கின்றீர்கள்? 234 சட்டமன்ற தொகுதி, 39 பாராளுமன்ற தொகுதிக்குள் இப்பொழுதே பணம் பதுக்க ஆரம்பித்திருக்கும்

இனி தமிழ்நாடு இன்னும் மோசமாகும், தேர்தல் நேரத்தில் ஒரு நள்ளிரவில் பணம் செல்லாது என அறிவித்தாலொழிய இனி நியாயமான தேர்தல் நடத்த முடியாது

அல்லது தமிழகம் திருந்தி வர இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம்,

அவ்வளவு அழிச்சாட்டியங்கள் இங்கு நடந்திருக்கின்றன. அந்த அழிவுகள் எளிதில் மாற்ற கூடியது அல்லவே அல்ல‌