சும்மா அழகிரியினை ஒதுக்கமுடியாது உடன்பிறப்புக்களே…
உடன்பிறப்புக்கள் மு.க அழகிரியினை புழுதிவாரி தூற்ற தொடங்கியிருக்கின்றன
ஆனால் ஒரு விஷயத்தை மறக்கின்றன
அழகிரி வாய்திறந்தால் திமுகவின் பல சிக்கல்கள்தான் வெளிவரும், எத்தனையோ தேர்தல்களை நடத்தியவர் அவர், திமுகவின் தென்னக ரகசியங்களுக்கு அவர்தான் கருவூலம், சும்மா தூக்கி எறிய அவர் கருவேப்பிலை அல்ல.
வைகோவிற்கு பின்னரான காலத்தில் தென்மாவட்டங்களில் திமுகவினை காத்து வெற்றிபெற செய்ததில் அழகிரி பங்கு முக்கியம், அவர் செய்த பல அசாத்திய வேலைகளும் முக்கியம்
ஏற்கனவே அவர் சொன்னபடி கேட்காமல் ஸ்டாலின் விருப்பபடி நடந்ததால்தான் கடந்தமுறை ஆட்சி தவறவிடபட்டது என்பதும் இன்னொரு கோணம்
இதே முக அழகிரி ஆர்.கே நகரில் புகுந்திருந்தால் தினகரன் இந்த வெற்றி பெற்றிருக்க முடியும்?
சும்மா அழகிரியினை ஒதுக்கமுடியாது உடன்பிறப்புக்களே, சென்னை மட்டும் தமிழகம் அல்ல, மீறி அவரை ஒதுக்கினால் தமிழகம் முழுக்க திமுகவிற்கு ஆர்.கே நகர் நிலைதான்.
முதலில் தான் உண்டு தன் முரசொலி வேலை உண்டு என இருந்தவர்தான் அழகிரி, பின் வைகோ வெளியேறிய காலங்களில் மதுரையில் கட்சி பொறுப்பிற்கு தள்ளபட்டார்.
அதன் பின் கட்சியினை அப்பக்கம் காத்தார், ஒப்புகொள்ளத்தான் வேண்டும்
ஆனால் அந்த பகுதி அரசியலில் சிலருடன் கைகோர்க்கும் அவசியம் இருந்தது, அப்படித்தான் அரசியல் இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது
அந்த ஊருக்கே உரிய சில அரசியலில் கொலை வழக்கிலும் சிக்கபட்டார், மதுரையில் அன்னை தெரசா இருந்தாலும் கொலை வழக்கில் சிக்காமல் வரமுடியாது, அப்படிபட்ட ஏரியா அது
ஆக தேவை என்றால் அவரை கட்சிக்குள் இழுப்பதும் தேவை இல்லாவிட்டால் வெளியே போ என்பதும் நியாயமா?
இன்று ஸ்டாலினும் வைகோவும் கட்டி தழுவுவதை பார்க்க அழகிரிக்கு எப்படி இருக்கும்?
உண்மையில் அழகிரி மானஸ்தன்
மாறன் குடும்பம் சன்டிவி பங்குபிரித்தலில் ஆட்டையினை போட முயன்றபொழுது சீறி எழுந்தது அழகிரிதான்
கலைஞரை மீறி மாறன் குடும்பம் சென்றபொழுது துடித்தெழுந்து அவர்களுக்கு கடிவாளம் போட்டது அழகிரிதான்
அந்த அழகிரி சீறிய சீறலில்தான் மாறன் குடும்பம் ஒதுக்கபட்டது, இல்லையேல் இன்று செயல்தலைவர் பதவியில் தயாநிதிமாறன் இருந்திருப்பார், கட்சி காங்கிரஸ் அடிமையாக இருந்திருக்கும்
இன்று தன்னை யாரை காட்டி அரசியலுக்கு இழுத்தார்களோளோ அந்த வைகோவுடன் அவர்கள் கட்டி தழுவும் பொழுது அழகிரிக்கு கோபம் வராமல் போகுமா?
அதுவும் வைகோ கலைஞரை பேசிய பேச்சு கொஞ்சமா? அந்த நாதஸ்வர கிண்டல், உலகின் பழமையான தொழில் எனும் கிண்டல் எல்லாம் சாதரணமா
அழகிரிக்கு மானம் இருக்கின்றது, கட்சி தோற்றதே எனும் சீற்றம் இருக்கின்றது. அந்த கோபம் வருபவனே உண்மையான திமுககாரன்
அந்த நல்ல திமுககாரனான அழகிரிக்கு வாழ்த்துக்கள்
கலைஞரின் அசாத்திய குணங்களில் ஒன்று அவரின் தைரியம், அவருக்கு பின் அந்த தைரியம் அழகிரிக்கு மட்டும்தான் இருக்கின்றது என்பதை எந்த உடன்பிறப்பு மறுக்க முடியும்?
இன்று திமுகவிற்கு தேவை தைரியமுள்ள வழிகாட்டி, அதனால் அழகிரி காலத்தின் தேவை