சித்திரம் பேசுதடி.. சிந்தை மயங்குதடி…

Image may contain: 1 person

இந்த ஓவியர் யார் என தெரியவில்லை, ஆனால் சங்கம் மகா தீவிரமாய் இவரை தேடுகின்றது .

தலைவியின் முகத்தை அப்படியே வரைந்திருக்கின்றார், ரவிவர்மன் இருந்தால் எப்படி வரைவானோ அப்படியே வரைந்திருக்கின்றார், வியப்பான‌ வாழ்த்துக்கள்.

விருது கொடுக்க மிக தகுதியான படம் என்பதால் இப்படத்தினை சங்கத்தின் பொது குழு, செயற்குழு, விருது வழங்கும் குழு எல்லாம் நெடுநேரம் ஆய்வு செய்த பின் அறிக்கை சமர்பிக்கபட்டது, அது இப்படி சொன்னது.

தலைவி படத்தில் ஒரே ஒரு சிறு குறை, அதாவது அந்த மூக்குத்தி இன்னும் கொஞ்சம் சிறியதாக மின்னிகொண்டிருக்கும், இப்படத்தில் மூக்குத்தி மின்னவில்லை

தலைவியின் தலைமுடி பிளீச் செய்யபட்டது போல் வரைந்திருக்கின்றார், அதெல்லாம் அவர் செய்ததில்லை

உதடு சரியாக வரையபடவில்லை, 1 டிகிரி கோணலாகிவிட்டது

தலைவியின் முகம் குளிர் நிலவினை போல பொலிவோடு இருக்கும், கண்களில் இருக்கும் தெளிவு முக பொலிவில் இல்லை

இந்த 4 குறைகளை தவிர வேறு குறை இல்லை என நிபுணர் குழுவும், பலதரபட்ட ஓவியர்களின் கருத்தும் ஒப்புகொண்டுவிட்டது

இந்த அருமையான ஓவியருக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கபடுகின்றது, விரைவில் இவருக்கு 4 தவறுகளுக்காக பொறிகிழியின் ஆயிரம் பொற்காசுகள் 996 ஆக மாற்றபட்டு விரைவில் வழங்கபடும்

இந்த நூற்றாண்டின் சிறந்த ஓவியம் இது என்று உலகிற்கு சங்கம் பெருமையுடன் அறிவிக்கின்றது