பெரியார் இன்று இருந்தால் திருமணம் செய்துகொள்வேன் : ஒரு இளம்பெண்
பெரியார் இன்று இருந்திருந்தால் திருமணம் செய்துகொள்வேன் என ஒரு இளம்பெண் இல்லை இல்லை பெண் சொல்கின்றார் ஒரு கூட்டம் கைதட்டுகின்றது
இப்பொழுது இப்படி பல பெண்கள் கிளம்பியிருப்பதாக சொல்லபடுகின்றது , கிளம்பட்டும்
ஒருவேளை இது தெரிந்துதான் கலைஞர் அமைதி ஆகிவிட்டாரோ என்னமோ, பெரியாருக்கு இப்படி ஒரு மாஸ் என்றால் கலைஞர் மீது அவர் மனைவியருக்கு அச்சம் வருமா வராதா? சாதரணமா அவர்?.
அதுவும் கலைஞர் எழுத்திலே மயங்கிய ராசாத்தி அம்மாளுக்கு உள்ளூர ஒரு அலாரம் அடித்திருக்காதா?
கலைஞர் அமைதி ஆனதிலும் சில மர்மம் இருக்கும் போலிருக்கின்றது, இருக்கட்டும்
அந்த பெண்களிடம் ஒரே கேள்விதான், ஏம்மா பெரியாரை மட்டும்தான் மணப்பீர்களா? பெரியாரின் சீடனாக , வாரிசாக ஒருவர் கோடான கோடி பணத்தோடு “மானமிகு” என சுற்றிகொண்டிருக்கின்றாரே, அவர் எல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா?