மம்முட்டி பார்வதி சர்ச்சை
கேரளாவில் ஒரு சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது, அது மம்முட்டிக்கும் நடிகை பார்வதிக்கும் இடையே ஆனது, விவகாரம் பெரிதாகி விஷயம் சசிதரூர் வரை சென்றிருக்கின்றது
அதாகபட்டது மம்முட்டி நடித்த சினிமா ஒன்றில் பெண்களுக்கு எதிரான வசனம் இருந்ததாம், அதனை பார்வதி கண்டித்துவிட்டாராம்
மம்முக்கா ரசிகர்கள் பொங்கினால் பார்வதிக்கு ஆதரவாக கேரள நாட்டிளம் பெண்களும் பொங்கிவிட்டார்கள், பார்வதிக்கு மிரட்டல் விடுத்த மம்முக்கா ரசிகர் கைது செய்யபட்டுவிட்டார், நிலமை மோசமாகிகொண்டே செல்கின்றது.
இது என்னடா சோதனை? அமித்ஷாவினை கூட அலறிவிட்ட நம் மாநிலத்தில் இப்படி ஒரு சிக்கலா என பிரபலங்கள் ஆளாளுக்கு அறிக்கைவிட்டு கொண்டிருக்கின்றன
இப்பொழுது காங்கிரஸ் எம்பி சசி தரூரும் பார்வதி பக்கம் வந்திருக்கின்றார், பெண்களுக்கு எதிரான கருத்தை பேசினால் அதை கண்டிக்க உரிமை உண்டு என பரபரப்பாக கிளம்பிவிட்டார்
இனி மம்முக்கா ரசிகர்கள் எப்படி கிளம்புவார்கள், அவர்கள் கிளம்பாவிட்டாலும் கேரள ஆர்.எஸ்.எஸ் எப்படி கிளப்பிவிடும், இப்படித்தான் .
அந்த சுனந்தா புஷ்கர் எனும் பெண் மர்மமாக இறந்தாரே, அவருக்கு சாகவா சுதந்திரம் இருந்தது? என கேட்டால் சசிதரூர் எப்படி சமாளிப்பாரோ??