பண்டைத் தமிழ் இலக்கிய தழுவல் திரைப்படங்கள்…
காதல் கோட்டை என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த நேரத்தில் டைரக்டர் அகத்தியன் கொண்டாடபட்டார் அதன் பின் ஆளையே காணவில்லை அவர் மகள் விஜயலட்சுமிதான் வந்து இளித்துகொண்டிருக்கின்றார்
நிச்சயம் காதல் கோட்டை எனும் படம் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதையின் காதல் தழுவல். அதன் பின் பண்டைய இலக்கியங்களை அகத்தியன் காப்பியடிக்க தடையாய் இருந்தது சாட்சாத் மணிரத்னம்
ஆம், சத்யவான் சாவித்திரி கதையினை ரோஜா என்றும், சீதை கதையினை ராவணன் என்றும், துரியோதனன் கர்னன் நட்பினை தளபதி என எடுத்தபின் மனிதர் என்ன செய்வார்
இந்த துவாசர் கதை, துஷ்யந்த மகாராஜா கதையினை வேறு மூன்றாம் பிறை என எடுத்டு தொலைத்தாயிற்று
நளன் உருமாறி பரதேசியாய் அலைந்த கதையினை இந்த ஷங்கர் என்பவர் வேற் ஐ படம் என எடுத்து தொலைத்துவிட்டார்
பின் அகத்தியன் என்னதான் செய்வார் பாவம்
ஆனால் இலக்கியத்திலும் புராணத்திலும் இன்னும் ஏகபட்ட கதைகள் இருக்கின்றன, நல்ல திறமைசாலி கண்டுகொண்டால் இன்னும் ஆயிரம் கதைகள் எடுக்கலாம்
ஆனால் முறையாக படித்து எடுக்கத்தான் ஆளில்லை