உதயகுமார் என்பவர் பெரும் போராளியாம்

Image may contain: 1 person, beard

ஏதோ அவர்கள் மட்டும்தான் ராதாபுரம் தொகுதி போலவும், நாமெல்லாம் கன்னியாகுமரிக்கு அங்கு 900 கிமீ தள்ளி வசிப்பவர் போலவும் சிலர் பேசிகொண்டிருக்கின்றான்

எதற்கு என்றால் உதயகுமார் என்பவர் பெரும் போராளியாம் நம்பிகொள்ள வேண்டுமாம்.

ஒரு பெரும் போராட்டத்தைன் நொடியில் வன்முறைக்கு மாறும் முரட்டு கூட்டத்தை பெரும் உயிர்பலி இன்றி நடத்தியவர் என்ற வகையில் உதயகுமாருக்கு என்றுமே நன்றிகள்

ஆனால் அணுவுலை வேண்டாம் என சொல்வதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, ஆனால் அப்போராட்டம் பெரிதாக கிளம்பியதும் பின் இரு கிராமங்களில் முடக்கபட்டு ஒடுக்கபட்டதுமே பெரும் காரணம்

சிக்கல் எங்கு தொடங்கியது?

அணுவுலை போலவே அங்கு மீணவதொழிலுக்கு பெரும் ஆபத்தாய் இருந்ததும் இருப்பதும் மணல் கம்பெனிகள். இவர்கள் அணுவுலையினை எதிர்த்தார்களே தவிர ஏராளமான மக்கள் கருத்துபடி தாதுமணலை முழுமையாக எதிர்க்கவில்லை, சும்மா மென்று முழுங்கினார்கள்

இந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பின் போராட்டம் இடிந்தகரை எனும் கிராமத்திற்குள் முடங்கி ஒடுக்கபட்டும் விட்டது

அணுவுலையினை எதிர்த்த உதயகுமார் தாதுமணலை ஏன் எதிர்க்கவில்லை? ககன் தீப் சிங் பேடி தலமையில் தாதுமணல் கொள்ளைக்காக கமிட்டி அமைக்கபட்டது, அது அறிக்கையும் தயாரித்தது

அந்த கமிட்டி முன் உதயகுமார் என்ன பேசினார், இன்றும் அந்த அறிக்கை என்னாயிற்று என யாராவது கேட்பார்களா? உதயகுமார் உட்பட .. மூச்ச்ச்ச்

உதயகுமார் தேர்தலில் பின்னடைய இதுதான் முதல் காரணம், கடற்கரை மக்களின் அபிமானம் இப்படித்தான் போயிற்று

அடுத்து தேர்தலில் இந்த பழ.நெடுமாறன் போன்றோரோடும் சைமனோடும் சேர்ந்து பிரிவினை பேசியது, இதனை யாரும் ரசிக்கவில்லை. என்று பழ.நெடுமாறன் போன்ற தேச துரோகிகளோடு உதயகுமார் அப்பக்கம் சிரித்துகொண்டு வந்தாரோ அன்றே எல்லாம் காலி

திடீரென பசுமை கட்சி என்ற ஒன்றோடு வலம் வந்தார், விவசாயிகள் மேல் அக்கறை இருக்குமானால் முன்பு நம்மாழ்வார் காலத்திலே அவரோடு இருந்து ராதாபுரம் பக்கம் இயற்கை விவசாயம் செய்திருக்க வேண்டும்? செய்தாரா?

ராதாபுரம் தமிழகத்தின் மிக வறண்ட பகுதி, பணக்காரன் பகுதியில் ஏழையின் குரல் கேட்காது என்பது போல தாமிரபரணி, களக்காடு, திறுகுறுங்குடி கொஞ்சம் தள்ளி நாகர்கொவில் என வளமான பகுதிகள் சுற்றி இருப்பதால் ராதாபுரத்தின் வறட்சி வெளிதெரியாது

இதற்கு ஒரே தீர்வு மேற்கு நோக்கி பாயும் நதிகளை கிழக்கே திருப்பி பெரும் அணை கட்டுவதே, அது அன்றி தீர்வில்லை

அதெல்லாம் பற்றி இவர் பேசினாரா? பேசமாட்டார் காரணம் அது குமரிமாவட்ட செழிப்பினை பாதிக்கும் விஷயம், இவரின் எஸ்டேட்டுக்களை பாதிக்கும் விஷயம் அதனால் செய்யமாட்டார்

கொடுமுடியாறு அணையினை உயர்த்தவிடாமல் அடம்பிடிப்பது குமரிமாவட்ட தொழிலதிபர் கூட்டம், அவர்களால்தான் அந்த அணை சிறிதாயிற்று, என்றாவது ராதாபுரம் வறட்சி நீங்க அந்த குமரிமாவட்ட சக்திகளிடமிருந்து அந்நிலத்தை பிடுங்கி அணையினை உயர்த்திகட்டவேண்டும் என்ற ஒரு வார்த்தை இந்நபரிடமிருந்து வந்திருக்குமா?

இதுதான் உண்மையான ராதாபுரம் தொகுதிவாசியின் ஆதங்கம், மணல் கம்பெனிகளை இவர் ஏன் முழுமையாக எதிர்க்கவில்லை என்பது மீணவனின் ஆதங்கம்

இன்னுமோர் விஷயம் உண்டு, பேச்சிபாறை அணை நீர் ராதாபுரம் வரை வரவேண்டும் என அரசு திட்டமியற்றியபொழுது அவர்கள் விடவில்லை, நிச்சயம் அந்நீர் வந்திருக்க வேண்டும்

இதுபற்றி உதயகுமார் வாய்திறப்பாரா என்றால் மாட்டார், காரணம் அவரின் எம்பிகனவில் நாகர்கோவில் வோட்டு முக்கியம், அங்கு அவர் நடத்தி வரும் பள்ளி முக்கியம்

ஆக இந்த விவசாயினை காப்பேன், பசுமை இயக்கம் என்பதெல்லாம் சும்மா, அவரிடம் ஒரு தீர்வுமில்லை

எப்பொழுது இவை சாத்தியமாகும்? காமராஜரை போல பெரும் சக்தி எழும்பி அது சுத்தமான கரங்களோடு டெல்லியில் பேசும்பொழுது சாத்தியமாகுமே தவிர, சும்மா கிராமத்து கடற்கரையிலும் , வில்லுகுறி பக்கம் உள்ள ரப்பர் மரங்கள் நடுவிலும் இருந்துகொண்டு நான் போராளி என சொன்னால் சாத்தியம் ஆகாது

ஆக இந்த உதயகுமார் என்பவரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் கிழக்கு கடற்கரை, தெற்கு கடற்கரையில் எந்த அரசு திட்டம், அதாவது பாதுகாப்புகள் நிறைந்த திட்டம் வந்துவிட கூடாது என்பதில் மிக குறியாக இருப்பது புரிகின்றது, இணையம் துறைமுகத்தை அப்படித்தான் எதிர்க்கின்றார்

தேசிய கட்சிகளை எதிர்க்க, இங்கு கடற்கரையில் மத்திய அரசின் திட்டம் வராமல் தடுக்க யாராலோ ஏவபடும் அம்புகள் இவரை போன்றவர்கள்

அதனால்தான் ரஜினி போன்றவர்கள் வந்தால் இங்கு இவர்களின் எதிர்ப்பு எடுபடாது, பிரிவினைவாதம் வளராது என்றெல்லாம் அஞ்சி ஏதோ பேசிகொண்டிருக்கின்றார்கள்

இவர்கள் பக்கம் நியாயம் இருந்து மக்கள் ஆதரித்தால் சரி எற்றுகொள்ளலாம், ரஜினிபக்கம் மக்கள் சாய்ந்தால் அதனையும் ஏற்றுகொள்ள வேண்டும்

அதிமுக, திமுகவினை சாடி ராதாபுரம் தொகுதியில் நின்ற உதயகுமாரை அத்தொகுதி மக்கள் நம்பவில்லை, யார் எப்படி? யாருக்கு கைப்பாவை என்பது யாருக்கும் தெரியாததல்ல‌

தன் இயக்கத்தை நடத்த உதயகுமாருக்கு முழு உரிமை உண்டு ஆனால் இங்கு ரஜினி வரகூடாது என சொல்ல என்ன தகுதி இருக்கின்றது?

இவர் என்ன தேர்தல் கமிஷன் தலைவரா?

விஜயகாந்தினை சைமன் ஏன் எதிர்த்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்,பின்னணி தூண்டுதல் எது எனவும் எல்லோருக்கும் புரியும்

இன்று ரஜினியினை உதயகுமாரும், சீமானும் கரித்துகொட்டும்பொழுதெ பிண்ணணியில் இருக்கும் சக்தி எது என எல்லோருக்கும் தெரிகின்றது

ராஜிவ் காலத்தில் போடபட்ட கூடங்குள ஒப்பந்தம் சோவியத் உடைவினால் தள்ளிபோடபட்டது, பின் 1995க்கு பின் புதுவடிவம் பெற்றது, அப்பொழுது பிரதமர் யாரென்றால் வாஜ்பாய்

அதன் பின்பே காங்கிரஸ் வந்தது, ஆனால் உதயகுமாரொ முழுக்க முழுக்க காங்கிரசையே சாடினார், பக்கவாத்தியத்திற்கு புலி ஆதரவு, ஈழம் என சில ராகங்களை வாசித்தார். அன்றே புரிந்தது இவரின் எதிரி அணுவுலை அல்ல மாறாக காங்கிரஸ் என்பது

இதோ மோடி அரசில் அணுவுலை எண்ணிக்கை பெருகிற்று, என்ன செய்துவிட்டார் உதயகுமார்? வெற்று முணகலோடு சரி

ராதாபுரம் தொகுதிமக்கள் நன்றி மிக்கவர்கள், அப்பாவு செய்த சில காரியங்களுக்காக அவரை சுயேட்சையாக வெல்ல வைத்த நன்றிகுரியவர்கள், இன்றும் அப்பாவு தோற்றது வெறும் 60 வொட்டு வித்தியாசமே

அம்மக்களின் நன்றிக்கு எடுத்துகாட்டு அது, இன்று தேர்தல் நடந்தாலும் அப்பாவு அசால்ட்டாக வெல்வார் அவரின் பெயர் அப்படி இருக்கின்றடு

உண்மையில் உதயகுமார் ராதாபுரம் மக்களுக்காக போராடி இருந்தால் பெருவெற்றி பெற்றிருப்பார், ஆனால் ராதாபுரம் மக்கள் அவரை உணர்ந்திருந்தனர், வாக்களிக்கவில்லை அதுதான் நடந்தது

காலம் எல்லாவற்றையும் தோலுரித்து காட்டும் , பதற்றத்தின் உச்சியில் தன் எசமான் விசுவாசத்தை காட்ட 
கண்டதை உளறும் உதயகுமாரை பார்க்க பரிதாபமாகவே இருக்கின்றது.

ராதாபுரம் தொகுதி மீதான அக்கறையும், எதனை செய்தால் அப்பகுதி செழிக்கும் என்ற தொலைதூர சிந்தனையும் அங்கு பிறந்த எல்லோருக்கும் உண்டு

ஏதோ உதயகுமாருக்கும் அவரின் அடிபொடிகளுக்கும் மட்டுமே அப்பொறுப்பு இருப்பது போலவும் அதனை தாண்டி தமிழகத்தையே இவர்கள் காப்பது போலவும் ரஜினியினை எதிர்க்கின்றார்களாம்


கொசுறு

கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்: சீமான்

அதானே, சொந்த ஊர் பாசம் என்பது இதுதான், சும்மாவே சைமன் மலையாளி என்பார்கள், இவரோ ஆதாரத்தோடு வருகின்றார்

மலையாளி விரட்டுவது இருக்கட்டும் சைமன், நன்கொடை என்ற பெயரில் உலகெல்லாம் இருந்து வசூல் நடக்கின்றதாமே, முடிந்தால் அதனை வேண்டாம் என சொல்ல நீர் தயாரா?