யார் மூவரசர்கள்?
இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுகூட இந்தியருக்கு அர்பணிக்கபட்ட ஆலயமாக இருக்காது, எல்லாமே இஸ்ரேலிய ஐரோப்பிய கிறிஸ்தவருக்கு அர்பணிக்கபட்டதாகவே இருக்கும்
அது கத்தோலிக்கமோ, பிரிவினையோ இந்த மண்ணின் மைந்தர் பெயரில் ஒரு ஆலயமும் இல்லை
ஆனால் ஒரே ஒரு இடத்தில் அப்படி விசித்திரமாக அமைந்திருக்கின்றது, நெல்லைமாவட்டம் கூத்தன்குழியில் மூவரசர் ஆலயம்
யார் மூவரசர்கள்?
இயேசு பிறந்தபொழுது மூன்று ஞானிகள் கிழக்கே இருந்து பார்க்க வந்தார்கள் என பைபிள் சொல்கின்றது அல்லவா? அந்த ஞானிகள், வெறும் வால்நட்சத்திரத்தை கண்டு இது பெரும் அவதாரம் அல்லவா? என சோதிட கலையால் உணர்ந்து கிட்டதட்ட 5000 கிமீ கடந்து வந்து இயேசுவினை கண்டார்கள் அல்லவா அவர்கள்
அந்த ஞானிகள் யூதர் அல்ல, இஸ்லாமியர் அல்ல, கிறிஸ்தவரும் அல்ல மாறாக இமயமலை ரிஷிகள்
அந்த மூன்று ரிஷிகளுக்குத்தான், இந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்குத்தான் கூத்தன்குழி கத்தோலிக்க ஆலயம் அர்பணிக்கபட்டுள்ளது
கிறிஸ்மஸ் தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கு அங்கு விழா கொண்டாடுவார்கள், ஆம் அந்த ஞானிகள் அக்காலகட்டத்தில்தான் இயேசுவினை கண்டார்கள் என்பதால் இக்காலகட்டமே அந்த மூன்று அரசர்களுக்கும் விழா
அந்த பகுதியே கொஞ்சம் ஆச்சரியமானது அதற்கு கொஞ்சம் தள்ளியே விஜயாபதி எனும் ஊரில் மிகபெரும் ரிஷியான விசுவாமித்திரர் என்பவருக்கு ஆலயம் உள்ளது, இந்தியாவில் அதுவும் ராமாயணத்தில் ராமனுக்கு குருவாக வரும் விசுவாமித்திரருக்கு உள்ள ஒரே ஆலயமாக அது கருதபடுகின்றது
எப்படியோ விசுவாமித்திரர் ஆலயம் இந்து ஆலயம் என்ற பெயரிலும், மூன்று ரிஷிகளுக்குள்ள ஆலயம் கிறிஸ்துவ ஆலயமாகவும்அர்பணிக்கபட்டிருப்பது சிறப்பு
இந்நாட்டின் மைந்தர்களுக்கு, ஞானிகளுக்கு ஆலயத்தை அமைத்து விழா கொண்டாடும் அந்த மக்களுக்கு திருவிழா வாழ்த்துக்கள்