லண்டனில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் இந்து ஆலயமாயிற்று

Image may contain: sky and outdoor

மேல் நாட்டில் இப்பொழுதெல்லாம் பொறுப்பே இல்லாமல் சுகவாழ்வு வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்தாயிற்று, பொறுப்பு இல்லை என்றால் சுதந்திரம் அதிகம் என பொருள்

அந்த சுதந்திரம் எல்லாவற்றையும் தூக்கி எறிய சொல்லிவிட்டது, மதம் உட்பட‌

பைபிளை ஆளாளுக்கு போட்டு குழப்புவதும், சில மறைமுக சக்திகள் தவறான விளக்கங்களை கொடுத்து பாடாய் படுத்துவதும் விஷயமும் அம்மக்கள் தலையினை பிய்த்துகொண்டு ஓட செய்வதாகவும் சில தகவல்கள் உண்டு

வாரம் முழுக்க உழைப்பவர்கள் ஞாயிற்று கிழமையில் நன்றாக உறங்கவே நினைப்பதாகவும், அல்லது சனி கிழமை ஆடும் ஆட்டத்தில் திங்கள் கிழமைதான் விழிப்பதும், மூழ்கடிக்கும் பணிச்சுமையும் காரணம் என்கின்றனர்

இப்போதுள்ள அறிவான சமூகத்தின் கேள்விக்கு பைபிளால் விடை அளிக்க முடியவில்லை அவர்கள் ஆன்மீக ஞான‌ தேடலுக்கு இதில் பதில் இல்லை என சொல்லும் கூட்டமும் பெருகிவிட்டது

நமது ஊரைப்போல் சபையினை விட்டு விலக்குவேன் என்பதும், ஊரைவிட்டு விலக்குவேன் என்பதும், பெண் தரமாட்டேன், திருமணம் நடக்காது என்றெல்லாம் மிரட்டுவது அங்கெல்லாம் சாத்தியமே இல்லை என்பதால் மிரட்டல்களுக்கும் வழியில்லை

அமெரிக்காவில் இப்பொழுதெல்லாம் சர்ச் எனப்படும் ஆலயங்களை விற்க தொடங்கியாயிற்று, ஆளே வராத ஆலயங்களை என்ன செய்ய? கிடைக்கும் தொகைக்கு விற்க தொடங்கிவிட்டார்கள்

அமெரிக்கா என்றல்ல ஐரோப்பா நிலையும் அதுவே

அப்படி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த இரு கிறிஸ்தவ ஆலயத்தை இந்துக்கள் வாங்கி இந்து ஆலயமாக மாற்றியாயிற்று

லண்டனிலும் ஒரு கிறிஸ்தவ ஆலயம் இந்து ஆலயமாயிற்று

இது இன்னும் அதிகரிக்கலாம் என்கின்றார்கள். நிச்சயம் அதிகரிக்கும்

இன்று வழிதவறிவிட்ட சமூகம் பின்னொரு நாளில் மதமார்க்கத்திற்கு திரும்பும்பொழுது கிடைத்த வழியினை பிடித்துகொள்ளும்

அன்றே நாஸ்டர்டாமஸ் என்பவன் எழுதி வைத்தான், மிகபெரும் தீர்க்கதரிசி அவன். அவன் கணிப்பு எதிலும் தவறவில்லை, அவன் மதம் பற்றி 600 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதினான், (அவன் காலத்தில் அமெரிக்கா இல்லை.)

“போப்பாண்டவர் அதிகாரம் இழப்பார், ஐரோப்பா கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவத்தை இழந்து உலகின் பழமையான மதத்தை முழுமையாக ஏற்றுகொள்ளும்..”

அது நடந்திவிடும் போலிருக்கின்றது