இந்த அரசு சரியில்லை என யார்தான் சொல்லவில்லை ?

பிரத்யேக சேனல், செய்தித்தாள் தொடங்க பழனிச்சாமி அதிமுக முடிவு

இன்னும் கட்சி நீடிக்கும் என நம்பும் இவர்களின் அபார தன்னம்பிக்கையினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்


இந்த அரசு சரியில்லை என யார் சொல்லவில்லை? எல்லோரும்தான் சொல்கின்றார்கள், டிராபிக் ராமசாமி முதல் குப்பத்து கோயிந்தசாமி வரை எல்லோரும் சொல்லித்தான் பார்க்கின்றார்கள்

நல்லகண்ணு முதல் எல்லோரும் சொன்ன விஷயம்தான் அது.

முக ஸ்டாலினோ குதிரை பேர அரசு என கிளிப்பிள்ளை போல சொல்லிகொண்டே இருக்கின்றார்

அட அதிமுகவின் தினகரனே அதனைத்தான் சொல்கின்றார்

ஆனால் யார் சொன்னாலும் வராத அதிர்வு, “சிஸ்டம் கெட்டுவிட்டது” என ரஜினி சொன்னால் மட்டும் வருகின்றதல்லவா? ஆளாளுக்கு பொங்குகின்றார்கள் அல்லவா?

அதில் தெரிகின்றது ரஜினியின் பலம் அல்லது அவர் மீதான பயம்


முதல்வர் பதவி என்பது சும்மா, அதற்கு அதிகாரமே இல்லை , நான் அதனை மதிப்பதே இல்லை : தமிழ்தேசிய வியாதி தியாகு

பின் என்ன மண்ணாங்கட்டிக்கு கலைஞரை 2009ல் அந்த திட்டு திட்டீனீர் அய்யா? முதல்வர் பதவியினை அவர் விட்டு இறங்கவேண்டும் என்றெல்லாம் ஏன் அப்படி குதித்தீர்???

அவர் பாவம் முதல்வர் பதவி சும்மா என அன்றே சொன்னால் என்ன?

நேரத்திற்கு ஒன்று பேசுவீரா தியாகு? இவரை வெளியே விட்டதே பெரும் தவறு.


இன்று மாலை கலைஞரை சந்திக்கின்றார் ரஜினி

கலைஞர் நலமாக இருந்தால் என்ன சொல்வார் தெரியுமா? துளியும் அரசியல் இருக்காது மாறாக உள்குத்து இப்படி இருக்கும்

“உங்களின் காலா படம் கருப்பர்கள் அரசியல் பேசுவதாக‌ , ஒடுக்கபட்டோர் அரசியல் பேசுவதாக, மேல் வர்க்கத்த்தை எதிர்க்கும் கதையாக இருக்கும் என ஏடுகள் சொன்னது. அப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அந்த கருத்து அப்படத்தோடு நின்றுவிடாமல், உங்கள் கட்சியிலும் உள்வாங்கபட்டு , கொள்கையாக்கபட்டு கட்சி வளர வாழ்த்துக்கள்

அந்த காலா ரஜினியினை திரையில் மட்டுமல்ல, அரசியலிலும் காண விழைகின்றேன்”


ஏம்பா பிரகாஷ் ராஜ், உமக்கு திருமணம் செய்ய மட்டும் சென்னை பெண்ணும், மும்பை பெண்ணும் வேண்டுமா?

ஏன் கன்னட பெண்ணையே கட்டினால் என்ன?