5.75 கிலோ தெய்வ தங்கச்சிலையில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையாம்…
காஞ்சிபுரம் கோவில்களின் நகரம் என்பார்கள், அப்படி காஞ்சி ஏகாம்பர நாதர் ஆலயத்தில் சாமி சிலையினை தங்கத்தில் செய்ய முடிவெடுத்தார்களாம்
சாமி சோமஸ்கந்தர் சிலை 5.75 கிலோ தங்கத்தில் செய்ய முடிவெடுத்து பணமும் கொடுத்தாயிற்று, சிலையும் தயாரானது பிரதிருஷ்டையும் முடிந்திருக்கின்றது
அதன் பின் வெடித்திருக்கின்றது சர்ச்சை, அதில் துளியும் தங்கமே இல்லையாம் வேறு எதனிலோ செய்து ஏமாற்றி இருக்கின்றார்கள், விஷயம் பெரிதாகி சிற்பி அவரின் அடிபொடிகள் மேல் மட்டம் என எல்லாம் கைதாகிவிட்டது
ஆதாரத்திற்கு சிலையினையும் கொண்டு செல்ல வேண்டும் அல்லவா? கொண்டு சென்றாயிற்று
கோவில் பணத்தில் விளையாடினால் சாமி குத்தம் என்பார்கள், இங்கு சாமியே குத்தம் ஆகிவிட்ட அளவிற்கு பெரும் ஊழல் நடந்திருக்கின்றது
என்ன ராசியோ தெரியவில்லை காஞ்சி கோவில்கள் என்றாலே இப்பொழுது சர்ச்சை போலிருக்கின்றது
தங்கத்தில் என் சிலை இல்லை என்பதற்காக என்னை மறந்துவிட்டார்களே என சோமஸ்கந்தர் அழுதுகொண்டிருக்கலாம்
விஷயம் இன்னும் தமிழிசை & ராசா கோஷ்டிக்கு தெரியாது போல, தெரிந்தால் மோடி ஆட்சியில் இந்து ஆலயத்தின் பொட்டு தங்கம் கூட ஏமாற்றமுடியாது என கிளம்பியிருக்க மாட்டார்களா?
கலைஞர் இருந்தால் கலாய்பு இப்படி இருந்திருக்கும் “நீதி தவறிய நெடுஞ்செழியன்கள், நெடுஞ்சாண் கிடையாய் கிடந்தவர்கள் ஆட்சியில் திருட்டு பொற்கொல்லர்களுக்கா பஞ்சம்???”