காவேரி பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்?
காவேரி பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்?
நீங்கள் என்ன செய்தீர்கள்?
ம்ம் போராடினோம், கடுமையாக போராடினோம், வழக்கு தொடுத்தோம்
நீர் வந்ததா?
கன்னடன் விடவில்லை
அது அல்ல விஷயம் 15 ஆண்டுகாலம் மத்திய அமைச்சர்கள், ஏராளமான எம்பிக்கள் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்?
ம்ம் கேட்டுகொண்டே இருந்தோம், இலங்கை பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்?
நீங்கள் என்ன முடிவு கொண்டு வந்தீர்கள்
ம்ம்ம்… சரி மீத்தேன் சிக்கலில் ரஜினி நிலை என்ன?
இப்பொழுது நீங்கள் விரட்டிவிட்டீர்களா?
ம்ம்.. விடு.. நீட் தேர்வினை ரஜினி எதிர்க்கவில்லை
நீங்கள் போராடி மீட்டுவிட்டீர்களா? என்னாயிற்று
ம்ம் அணுவுலை விஷயத்தில் அவர் வாய்திறக்கவில்லை
நீங்கள் வாய்திறந்து அணுவுலையினை மூடிவிட்டீர்களா?
குமரி புயலுக்கு அவர் வரவே இல்லை
சரி எல்லோரும் வந்து குமரியினை மீட்டுவிட்டார்களா? என்ன நடந்திற்று
ம்ம் செம்மரம் தொழிலாளர் கொலையில் ரஜினி என்ன செய்தார்?
நீங்கள் நியாயம் வாங்கிவிட்டீர்களா?
இல்லை .. ஆனால் குரல் எழுப்பினோம்
பிரச்சினை முடிந்ததா? தீர்வு கிடைத்ததா?
இல்லை.. அதெல்லாம் தீர்வில்லா பிரச்சினை
தீர்வே இல்லா பிரச்சினை என தெரிகின்றதல்லவா? அவர் நடிகனாய் இருந்தே தீர்க்க முடியுமா?
இல்லை அவர் வந்து போராடியிருக்க வேண்டும்
அதாவது ஆட்சியில் நீங்கள் இருப்பீர்கள், அவர் வந்து போராடவேண்டுமா
ஆம், அப்படித்தான்
உங்கள் ஆட்சியில்தான் சிக்கல் வந்தது, ஒருவேளை அவர் அமர்ந்துவிட்டால்தான் அதைபற்றி அதாவது உங்களால் முடியாமல் போன சிக்கலை அவர் முடிக்கின்றாரா இல்லையா என பார்க்க வேண்டும் ,அதுதானே சரி?
நீ ஆரிய அடிவருடி, தமிழின துரோகி, இந்துத்வா எடுபிடி, பிராமணனின் கைப்பிடி..”