நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றார்
நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றாராம், சங்கத்து சார்பில் வரவேற்கலாம் என்றால் ஒரு தகவலும் இல்லை
அவர் அலுவலகமும் சரி, அவரின் அல்லக்கைகளும் சரி ஒன்றுமே சொல்வதில்லை, ஏதோ பிரிட்டிஷ் மகாராணியின் பாதுகாவலர்கள் போல பாவ்லா காட்டுகின்றார்கள்.
இவர்களால் குஷ்பு வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாது. அந்த அலுவலகத்தின் 4 வோட்டு வேண்டுமானால் கொடுக்கும் சம்பளத்திற்காக கிடைக்கலாம்.
ரஜினி பாணியில் சொல்லிவிடலாம் “அந்த அலுவலகம் இருக்கும் வரை குஷ்புவிற்கு ஆண்டவனாலும் 10 வோட்டுக்கு மேல் வாங்க வைக்க முடியாது”.
இதனை கண்டித்து சங்கத்தின் பொதுகுழு, செயற்குழு, ஆட்சிமன்ற குழு எல்லாம் அவசர கூட்டம் நடத்திகொண்டிருக்கின்றது
இந்த சுயநல, அழிச்சாட்டிய அலுவலத்திடமிருந்து தலைவியினை மீட்க சங்கம் முடிவெடுத்திருக்கின்றது
அலுவலகத்தை கைபற்றி தலைவியினை மீட்போம் என மும்முறை சத்தியம் செய்துவிட்டு குஷ்பு படத்தின் முன் தியானத்தில் அமர்ந்தாயிற்று
சங்கத்திற்கும் அந்த அலுவலத்திற்குமான “தர்ம யுத்தம்” தொடங்குகின்றது என உலகிற்கு சங்கம் அறிவிக்கின்றது