போக்குவரத்து என்பது தமிழகத்தின் ரத்த ஒட்டம்
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கொடுக்க அரசிடம் பணம் இல்லை : செய்தி
ஆனால் ஜெயாவிற்கும் எம்ஜிஆருக்கும் சிலை திறக்கவும், வெகு ஆடம்பரமாக ராமசந்திரன் நூற்றாண்டுவிழா நடத்தவும் பணம் உண்டாம்
ஜெயா நினைவு மண்டபத்தை பல நூறு கோடிகளில் கட்ட சில கோடிகளில் மாடல் மட்டும் வரைவார்களாம்
ஆனால் தொழிலாளருக்கு கொடுக்க அரசிடம் நிதி இல்லையாம்
நம்பிகொள்ளுங்கள் வேறு என்ன செய்ய முடியும்?
பஸ் ஓட்டிகொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு வந்தால் கூட மிக பொறுப்பாக பஸ்ஸை நிறுத்திவிட்டு செத்துபோகும் பொறுப்பான ஓட்டுநர்கள் இருக்கும் இடம் போக்குவரத்து கழகம்
உண்மையில் மிக பொறுப்பான மக்கள் பணியினை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள், நேற்று வரை அப்படித்தான்
ஆனால் இன்று திடீரென ஸ்டைரக் ஆரம்பித்துவிட்டார்கள். போக்குவரத்து என்பது தமிழகத்தின் ரத்த ஒட்டம் போன்ற விஷயம், அதனால் ஸ்தம்பித்து நிற்கின்றது தமிழகம்
அவர்களுக்கும் அரசுக்கும் அவ்வப்போது உரசல்கள் வருவதுதான், ஆனால் இதுவரை அறிவித்துவிட்டுத்தான் செய்திருக்கின்றார்கள்
ஆனால் இன்று மிகபெரும் தவறு செய்துவிட்டார்கள், தமிழகம் உறைந்துநிற்கின்றது
பொது போக்குவரத்தை நம்பியிருந்த எல்லோருடைய பணியும் பாதிக்கபட்டிருக்கின்றது, இது எவ்வளவு பெரும் சிக்கலை ஒவ்வொருவருக்கும் உருவாக்கும் என்பது கொடுமையானது
பள்ளி, கல்லூரி, கடைசி நாள் பணம் கட்டும் விஷயம், மிக முக்கியமான இன்டர்வியூ, தேர்வு என எத்தனையோ தரப்பினர் பாதிக்கபட்டுகொண்டிருக்கின்றார்கள்
அரசு இன்னும் அமைதியாக இருப்பது நல்லதல்ல, போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினை தீர்க்கபடவேண்டும்
எங்கள் ஆட்சிக்கு என்ன குறை? என கேட்ட அமைச்சர்கள் இக்குறையினை உடனே போக்க முன்வரட்டும்