ரஜினியினை வைத்து சம்பாதித்தது யாரென்றால் பதிலே வராது…..

Image may contain: 1 person, text

ரஜினி சினிமாவில் தமிழனை சுரண்டி சம்பாத்தவர் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

ரஜினியினை வைத்து சம்பாதித்தது யாரென்றால் பதிலே வராது, அது பாலசந்தராகட்டும், சின்னப்பா தேவராகட்டும், ஏவிஎம் செட்டியார் ஆகட்டும் , ஆர்.எம் வீரப்பனாகட்டும், சன் டிவி கலாநிதிமாறன் , தானு ஆகட்டும் ஏன் இன்று வந்திருக்கும் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் ஆகட்டும் எல்லோரும் யார்?

பச்சை தமிழர்கள் நட்சத்திர கிரிக்கெட்டில் ரஜினியினை வைத்து விளம்பரபடுத்தியது யார்? அண்ணாச்சி யோகராஜா, அல்லிராஜா சுபாஷ்கரன் எனும் இரு தமிழர்கள்

அதன் ஒளிபரப்பில் சம்பாதிக்க போவது சன்டிவி எனும் தமிழன் டிவி, இதில் ரஜினிக்கு என்ன வரும்? சம்பளம் மட்டும் வரும்

ரஜினியால் சினிமாவில் எத்தனையோ தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததா இல்லையா?

பல்லாயிரம் கோடி வருமானம் கொட்டும் ரஜினி படத்தில் அத்தனை பணமும் அவர் மட்டுமா கொண்டு செல்கின்றார், சம்பளத்தை தவிர என்ன வரும்?

ஆனால் மீதி எல்லாம் எங்கே செல்லும்?

ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் உட்பட எல்லாமே தமிழகத்தில்தான் இருக்கின்றது, சென்னை வெள்ளத்திற்கு அவர் திறந்தும் கொடுத்தார்

ரஜினியின் சொத்துக்கள் தமிழனடமிருந்து சுரண்டபட்டது என்றால் அடுத்த வாரிசு யார்? சாட்சாத் தனுஷ்

அவர் தமிழர் இல்லை என சொல்லமுடியுமா? வேண்டுமானால் கஸ்தூரிராஜா இல்லை அந்த இன்னொரு தம்பதியிடம் கேட்டு வாருங்கள்

ஆக தமிழனின் சொத்து தமிழனுக்கேதான் வந்திருக்கின்றது

இப்படித்தான் சோனியாவினை வந்தேறி என்றார்கள், அவர் சாமர்த்தியமாக மன்மோகன் சிங் பின் தன் மகன் என கொண்டுவந்துவிட்டார்

நீங்களும் அதற்குத்தான் ஆசைபடுகினறீர்களா ‘டம்ளர் பாய்ஸ்”

ரஜினியினை சீண்டாமல் விட்டுவிடுவது உங்களுக்கு நல்லது, இல்லையேல் பல அதிரடி காட்சிகள் வரும் அதில் நீங்கள் ஈழத்திற்கு அப்பால் வீசி எறியபடுவீர்கள்

ரஜினி பாஜக சார்பு , அது ஆபத்து என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது

பாஜகவே தமாஷ் கட்சி, ராமர் கோவிலை கூட கட்ட தெரியாமல் முழிக்கும் கட்சி, மாட்டுகறியில் கூட பின்வாங்கிற்று

ரஜினி பாஜக அபிமானி என்றால் அவருக்கு அதோடு சேர தெரியாதா? ஏன் தனியாக நிற்க வேண்டும்

பாஜவின் “திறமை” எவ்வளவு என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும்

ஆக ரஜினி இந்து அரசியல்வாதி என்பதெல்லாம் சும்மா கட்டு கதைகள்

பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்டாக இருந்த சீமான் கட்சி நடத்துவாராம், அதே பாரதிராஜா படத்தில் நடித்த ரஜினி கட்சி தொடங்க கூடாதாம்

இதுதான் சீமானிசம்

ஒருவேளை சீமான் முதல்வரானால் விளையாட்டு போட்டிகள், உலக கோப்பை கிரிக்கெட், சர்வதேச தடகள போட்டிகள் தமிழகத்தில் நடந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

“ஏ உசேன் போல்ட் உன் ஊர்ல ஓடிக்க, ஏ பெல்ப்ஸ் உன் ஊர்ல நீந்திக்க, ஏ செரினா வில்லியம்ஸ் ஒழுங்கா உங்க ஊர்ல டென்னிஸ் ஆடிக்க‌

எவண்டா அவன் கெய்லி டிவில்லியர்ஸ் ? என்னடா உலக கோப்பை கிரிக்கெட்? எந்நாட்டில் என் மண்ணின் பிள்ளைகள் மட்டும்தான் சிக்ஸ் அடிக்கும் , நீ வந்தா 1 ரன்னில் அவுட்டாயிரு உன்ன ஆட வேண்டாம்னு சொல்லல‌

ஆனா எங்கள ஜெயிக்க கூடாது விடமாட்ட்டோம், இது எங்க மண்ணு நாங்கதான் ஜெயிப்போம்

உங்கள எல்லாம் இங்க ஆடவிட்டுத்தானடா எல்லா கோப்பையும் வாங்கிட்டு போறீங்க? நாங்க விடமாட்டோம்

இந்த அது இது இது ஒலிம்பிக், அது இதுண்ணு எவனாவது என் நாட்டில விளையாட வந்த ஒழிச்சு புடுவேன் ஆமா, நாங்களே விளையாடி நாங்களே சாம்பியன் ஆகிகொள்வோம்

ஒலிம்பிக்கோ உலக போட்டியோ எங்கள் நாட்டில் எங்கள் பிள்ளைகள் மட்டும்தான் விளையாடும் ஆமாம், இப்படி எல்லா பயலையும் விளையாட விட்டுத்தானே எல்லோரும் என் தேசத்தை 82ம் இடத்திற்கு தள்ளிட்டீங்க‌

சின்ன இங்கிலாந்து, ஜெர்மன் எல்லாம் இந்தியாவினை விட நிறைய பதக்கம் வாங்கிச்சின்னா எப்படி? இங்க விளையாட விட்டிருக்க கூடாது, நாங்க இருக்கோம் விளையாடுவொம் நீங்க கைதட்டினா போதும், இல்ல தொலைச்சி புடுவேன்

அது என்னடா சென்னையில அழகி போட்டி? எதுக்கு உலகமெல்லாம் இருந்து சென்னைக்கு வரணும்?

நா சொல்றேன் குப்பத்து குப்பாயிதான் உலக அழகி , கயல்விழி கிரீடத்த சூட்டு”