போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் : தமிழிசை

போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் , பஸ்களை அரசுடைமை ஆக்கி, நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனை : தமிழிசை சீற்றம்

அதானே, எல்லா விஷயங்களையும் அம்பானி போல தனியாரிடம் கொடுத்தால் அக்காவும் அவர் கட்சியும் மிக்க சந்தோஷபடும் போல‌

தனியார்கள் கையில் இருந்த போக்குவரத்து கழகத்தை ஏழை மக்களும் பலன்பெறும் வகையில் திராவிட கட்சிதான் மாற்றியது, எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது

சிக்கல் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியிலும், அதனை தொடர்ந்து ஓராண்டாக நடக்கும் பாஜகவின் மறைமுக ஆட்சியிலும் வந்திருக்கின்றது

வழக்கமாக திமுக, அது இது என குதிக்கும் அக்கா, இம்முறை பட்டும் படாமலும் திராவிட கட்சி என சொல்லிவிட்டார்

அக்கா சாடுவது ஏன் தெரியுமா? அன்று பயோனியர் போன்ற பெரும் நாகர்கோவில் முதலாளிகள் தனியார் பஸ் சர்வீசில் ஏகபோகமாக சம்பாதித்தனர்

பின்னாளில் திராவிட திமுக அதற்கு முற்றுபுள்ளி வைத்தது

என்ன இருந்தாலும் அக்காவின் நாஞ்சில் நாட்டு பாசம் கொஞ்சமல்ல, தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பது இதுதான்