இது என்ன ரஜினி சர்ச்சை?

Image may contain: 3 people

இது என்ன ரஜினி சர்ச்சை?, அன்றே ராமசந்திரன் மலையாளி என பெரும் சர்ச்சை வெடித்த தமிழகம் இருந்தது, ஆனால் அவரை கலாய்க்க கலைஞர் போன்றவர்கள் இருந்தார்கள்

“நான் ஒன்றும் சும்மா அல்ல, காந்தியுடன் உண்ணாவிரதம் இருந்தவன் நான்” என பதற்றத்தில் உளறுவார் ராமசந்திரன்

“எது தெருமுனையில் பூக்கடை வைத்திருக்கின்றானே? அந்த காந்தியா?..” என கலாய்பார்கள் திமுகவினர்

“நாங்கள் மலையாளி அல்ல, மன்றாடியார் பரம்பரை” என்பார் ராமசந்திரன்

“டெல்லியில் மன்றாடிய பரம்பரை” என்பார் கலைஞர்

“நடிகன் கட்சிக்கு என்ன கொள்கை? என்பர் திமுகவினர்

“அண்ணாயிசம்” என்பார் ராமசந்திரன்

“அதை விளக்கி சொல்..” என்பார்கள் இவர்கள், விளக்க முற்பட்டு குழப்பத்தில் முடிப்பார் ராமசந்திரன்

திமுகவினர் கிடுக்கிபிடி கேள்விகள் போட போட தன் கடைசி அஸ்திரத்தை வீசுவார் ராமசந்திரன்

“எனக்கு தேவை பணம் அல்ல, நியாயம், ஊழலற்ற தமிழகம். எனக்கு பிள்ளைகள் இல்லை, அம்மா இல்லை. தமிழக தாய்மார்கள்தான் என் அம்மா, நான் அவர்கள் வீட்டு பிள்ளை

தாய்குலமே என்னை எவ்வளவு அவமானமாக திட்டுகின்றார்கள் பாருங்கள், எனக்கு அரசியல் வேண்டாம், சினிமா வேண்டாம் உங்கள் அன்பு போதும், சென்னை முதல் குமரிவரை தினம் ஒரு வீட்டில் பிச்சை எடுத்து உண்டு என் நன்றிகடனை தீர்ப்பேன், எனக்கு அவ்வளவு நீங்கள் செய்திருக்கின்றீர்கள், வரட்டுமா ஒருவேளை சோறு தரமாட்டீர்களா?”

அவ்வளவுதான் தமிழக தாய்குலம், தந்தைகுலம் எல்லாம் பொங்கி எழுந்து “என் ராசா சோறு என்ன? வோட்டே போடுறோம், எங்க சாமி அழப்புடாது..” என சொல்லி அவரை தமிழக அரசர் ஆக்கிற்று

நேரடியாக மக்கள் முன்பே சென்று நின்றவர் அவர், ரசிகர் தரிசனம், ஜப்பானில் பேட்டி போன்ற கனவு அரசியலை அவர் செய்யவில்லை

ராமசந்திரனுக்கு அரசியல் தெரியாது, கொள்கை புரியாது , வாதமாக பதிலளிக்க தெரியாது

ஆனால் மக்களை எப்படி வளைக்க வேண்டும் என்ற வித்தை அநாசயமாக வந்தது, தன் பலவீனம் எதுவோ அதனை மிக சரியாக மக்கள் அனுதாபமாக பாற்றி காட்டியவர் அவர்

ரஜினி இதில் எல்லாம் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை, ஏதோ மனதில் பட்டதை எல்லாம் பேசுகின்றார், ரசிகர்களை மட்டும் சந்திக்கின்றார், மக்களிடம் பேசியதாக கூட தெரியவில்லை ,

ஆக ரஜினி மாற வேண்டியது நிறைய இருக்கின்றது, இல்லாவிட்டால் இமயமலைக்கே போக வேண்டியதுதான்