வைகோ கலைஞரை சந்தித்து விட்டு கொடுத்த பேட்டி
பைபிளில் இயேசு சொன்ன ஊதாரி மைந்தன் கதைக்கு விளக்கம் வேண்டுமா?
வைகோ கலைஞரை சந்தித்து விட்டு கொடுத்த பேட்டியினை பாருங்கள் புரியும்
அது என்ன கதை என்றால், “ஒரு பணக்காரனுக்கு இரு மகன்கள் இருந்தனர், ஒருவன் சொத்த பிரித்துகொண்டு விற்றுவிட்டு வெளியூர் சென்றான் நாளாக நாளாக பணம் குறைந்தது, இறுதியில் பன்றி எல்லாம் மேய்த்தான், சில இடங்களில் அடியும் பட்டான்
ஒருநாள் வறுமைதாங்காது என் தந்தை என்னை எப்படி எல்லாம் வைத்திருந்தார் தெரியுமா? அவரிடம் செல்வேன் என சென்றான்
தந்தையும் அவனை அணைத்துகொண்டு பழைய வாழ்க்கையினை கொடுத்தார், இதனை கண்ட இளைய மகன் அவன் ஓடிப்போனவன், நானோ உம்மோடே இருக்கின்றேன் என்னை மகிமைபடுத்தவில்லையா என அழுதான்
தந்தை சொன்னார், நீ என்னோடே இருந்தாய் அது மகிழ்ச்சி அல்ல, காணாமல் போனவன் வந்ததே மகிழ்ச்சி”
கலைஞர் நலமோடு இருந்திருந்தால் நிச்சயம் இக்கதைதான் முரசொலியில் வந்திருக்கும்
அதோடு அவன் பன்றி மேய்த்தது, சேற்றில் புரண்டது, அடிவாங்கி பராரியாய் அலைந்தது எல்லாம் தவறாமல் வந்திருக்கும்