கொஞ்ச நாளாக தமிழகத்தில் கேட்கும் ஒரு குரல் ஜெய் பீம் …
கொஞ்ச நாளாக தமிழகத்தில் ஒரு குரல் கேட்கின்றது, அது ஜெய் பீம் என்பதாகும்
அதாவது அம்பேத்கர் வழியில் போராடுவார்களாம், இதன் தலைவன் இயக்குநர் ரஞ்சித் என இப்போதைக்கு அறியபடுகின்றார்
அம்பேத்கர் தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடினார் மறுப்பதற்கில்லை, ஆனால் தெற்கில் பெரியார் போராடிய போட்டம் அதனை விட வலுவானது
சாதி ஒழிக்க தமிழகத்திலும் பெரியார் போல பலர் போராடினர், பெரியார் அதில் குறிப்பிடதக்கவர்
ஆக இவர்கள் எல்லாம் போராட எதனை அம்பேத்கர் சொல்லிவிட்டார் என குதியோ குதி என அவரை பிடித்து தொங்குகின்றார்கள் என தெரியவில்லை
இங்கே ஜாதி ஒழிப்பு, சீர்திருத்தம் என சொல்ல பெரியாரை விட என்ன இருக்கின்றது, அப்படி சொல்பவர்கள் உண்மையானவர்கள் என்றால் அம்பேத்கர் பக்கம் பெரியாரையும் வைக்கலாம்
ஜெய் பீம் என சொல்பவர்கள், மானமும் அறிவும் மானிடர்க்கு அழகு எனும் கோஷத்தையும் சொல்லலாம்
ஆனால் அம்பேத்கரை மட்டும் தூக்கிபிடிப்போம் என்றால், அவர் போல் புத்தமதத்திற்கு மாறவேண்டும் அல்லவா? அதுவுமில்லை
பின் ஏன் இந்த கோஷம்
பெரியாரை அம்பேத்கரை கொண்டு மறக்கடிக்கும் நுண் அரசியல் இந்த கும்பல் மூலம் செய்யபடுகின்றது
இவர்கள் செய்வதும் காவிகும்பலின் ரகசிய வேலையே, திராவிட சக்திகளை ஒழிக்க , அதன் குரலை ஒடுக்க கூடவே வந்து கொல்லும் கயவர்கள் இவர்கள்
இவர்களிடம் தாழ்த்தபட்டோரும், தமிழகமும் மிக விழிப்பாய் இருப்பது நல்லது
இல்லையேல் தாழ்தபட்டோரை உசுப்பிவிட்டு, பின் மாயாவதி சரியில்லை, கன்ஷிராம் சரியில்லை பாஜகவே தீர்வு என வந்து ரோட்டுக்கு கூட காவி சாயம் அடிக்கும் பாஜகவின் நிலை தமிழகத்திற்கும் வரும்
இவர்கள் அந்த காரியத்திற்குத்தான் யாராலோ உருவாக்க பட்டிருக்கின்றார்கள்,
ஜெய் பீம் ஒன்றும் மோசமான கோஷம் அல்ல, ஆனால் பெரியார் கொள்கையினை, குரலை மறக்கடித்தல் போல எழுப்பபடும் ஜெய்பீம் மகா ஆபத்தானது