ரஜினியை இலங்கை மொத்தமாக வாழ்த்தியிருக்கின்றது
ரஜினிக்கு உள்நாட்டில் ஆதரவு உண்டோ இல்லையோ, வெளிநாட்டில் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன, இன்று வாழ்த்தியிருப்பவர் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
ராஜபக்சே மகன் வாழ்த்தியதை தொடர்ந்து விக்னேஸ்வரனும் வாழ்த்தியிருகின்றார், ஆக இலங்கை மொத்தமாக வாழ்த்தியிருக்கின்றது
இப்படி இலங்கை ஒற்றுமையினை ஏற்படுத்திய ரஜினி வாழ்க என சொல்லிவிடலாமா என்றால் அங்குதான் இருக்கின்றது சிக்கல்
இந்த விக்னேஸ்வரன் , அந்த சாமியார் பிரேமானந்தாவின் தீவிர சீடர். பிரேமானந்தாவினை விடுதலை செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை எல்லாம் விடுத்து வந்து பார்த்துவிட்டு சென்றவர்
அப்படிபட்ட சாமியாரின் சீடரின் வாழ்த்தை எப்படி ஏற்றுகொள்வது என தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது ரஜினி தரப்பு
மனிதருக்கு எப்படி எல்லாம் சிக்கல்? வாழ்த்து வருவதிலுமா சிக்கல்?