டிரம்ப் என்பவரை கொஞ்சம் அச்சமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது

டிரம்ப் என்பவரை கொஞ்சம் அச்சமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது

அமெரிக்காவில் புகுந்துள்ள அயல்நாட்டு மக்களை வெளியே விரட்டுவதில் கடும்போக்கு எடுத்துவிட்டார், இன்று மட்டும் 2 லட்சம் எல்சாடர் நாட்டு மக்களை கிளம்ப உத்தரவிட்டுள்ளார்

அவர்களில் முறையான விசாவில் பணிசெய்வோரும் உண்டு, அதற்கென்ன வேலை இல்லை போதுமா? கிளம்பு என அவர்போக்கில் சொல்லிவிட்டார்.

அவர்களில் ஏராளமானோர் 2001ல் ஏற்பட்ட சால்வேடர் நாட்டு இயற்கை அழிவில் வந்தவர்கள் கிட்டதட்ட 18 வருடம் குடும்பமமாக வாழ்கின்றவர்கள், அமெரிக்க குடியுரிமையும் குழந்தைகளுக்கு உண்டு

அவர்களைத்தான் மொத்தமாக வெளியேறுங்கள் என டிரம்ப் சொல்லியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது

அமெரிக்கருக்கு உள்ளூர வெளிநாட்டு மக்கள் மீது ஒருவித வெறுப்பு இருந்துகொண்டே இருந்தது, அக்காலத்தில் இருந்து அப்படித்தான் , எல்லா நாடுகளும் வெளிநாட்டு பணியாளர்களை பாரினர் அல்லது எக்ஸ்பாட்ரியேட் என கவுரவமாக அழைத்தால், அமெரிக்காவில் அவர்கள் பெயர் ஏலியன்ஸ்

ஏலியன்ஸ் என்றால் இவ்வுலகினை சேர்ந்தவன் இல்லை என பொருள்படும் அவமானமான வார்த்தை

அந்த வன்மத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் டிரம்ப் இப்படி ஆடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

2 லட்சம் மக்களை வெளியே போ என சொன்ன டிரம்பிற்கு 7 லட்சம் இந்தியர்கள் கழுத்தில் கை வைக்க எவ்வளவு நேரமாகும் என்ற இன்னொரு பரபரப்பும் ஏற்பட்டிருகின்றது