இப்பொழுதெல்லாம் புது ஸ்டைல் கிளம்பியிருக்கின்றது

இப்பொழுதெல்லாம் புது ஸ்டைல் கிளம்பியிருக்கின்றது, மன்னர்கள் கட்டிய கோட்டை, அவர்கள் ஆண்ட கோட்டையில் ஏதாவது சிலை இருந்தால் அதனை உடனே இந்துமத அடையாளமாக மாற்றிவிடுவது

இப்படி பாலக்காட்டில் இருக்கும் திப்பு கோட்டை அனுமார் கோட்டை ஆகிவிட்டதாம் , காரணம அங்கு சிறிய அனுமார் சிலை இருக்கின்றதாம்

இனி பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை ஜக்கம்மா கோட்டை ஆகலாம், இப்படி எல்லா கோட்டையும் சாமி கோட்டைகள் ஆகிவிடலாம்

நிஜாம்களும், சுல்தானும் வாழ்ந்த அரண்மனைகளில் சாமி சிலை முளைத்து அவைகளும் அம்மன் மஹால், பிள்ளையார் ஹால் ஆகலாம்

செங்கோட்டை எப்படி ஆகபோகின்றதோ தெரியவில்லை

எந்த கோட்டையினையும் எப்படியும் மாற்றுங்கள், அடையாளங்களை மாற்றி நாசமாய் போன பொய் வரலாற்றை உருவாக்குங்கள்

ஆனால் பத்மநாபபுரம் அரண்மனை பக்கம் மட்டும் வந்தால் சங்கம் பொறுக்காது, அங்குதான் “வருஷம் 16” படம் எடுக்கபட்டது, அதனால் அது குஷ்பு மகால் என சங்கம் என்றோ அறிவித்தாயிற்று

அதை எந்த மன்னன் கட்டினான்? எப்படிபட்ட மரங்களால் அலங்கரித்தான், அதன் வரலாறு என்ன என்பதெல்லாம் யாருக்கு தேவை?

குஷ்பு கால்பட்டதால் அது இனி “குஷ்பு மகால்” அவ்வளவுதான்

அந்த பெருமை அழியவிடமாட்டோம், விட்டுகொடுக்கவே மாட்டோம்