மூடனை பேசவிடாதே பல சர்ச்சைகளை தவிர்க்கலாம் : மேல்நாட்டு பழமொழி

Image may contain: 2 people

“மூடனை பேசவிடாதே பல சர்ச்சைகளை தவிர்க்கலாம்” என்கிறது மேல்நாட்டு பழமொழி

அப்படி இந்த எச்.ராசா என்பவரை அடக்கி வைக்கவேண்டிய அவசியம் சம்பந்தபட்ட தரப்புகளுக்கு இருக்கின்றது, இம்மாதிரி ஆட்களை தவிர்த்தால் அன்றி இங்கு அமைதி சாத்தியமில்லை.

ஆண்டாளை பற்றி வைரமுத்து எழுதியது தவறு என அவரே மன்னிப்பும் கேட்டாயிற்று, அதற்காக பேச கூடா வார்த்தைகளை பேசி ராசா தீக்கனைகளை வீசுவது, தமிழகம் ரத்த களறி ஆகவேண்டும் என்ற ஆசையே தவிர வேறு இல்லை

விபச்சாரி என்பதன் வரையறை என்ன? இலக்கணம் என்ன? என்பதை ராசா சொல்வாரா? இச்சமூகத்தில் தன்னை மரத்து யார் யாருக்கோ பயன்பட்டு பின் தூக்கி எறியபடும் அந்த பாவபட்ட பிறவிகளால் என்ன ஆபத்து வந்துவிட்டது

ஆனால் ராசா போன்ற நபர்கள் சமூக ஆபத்து மிக்கவர்கள் என்பதால், விபச்சாரியினை விட மோசமானவர்கள் இவர்களை போன்றவர்கள்தான். நிச்சயம் இவர்கள்தான்

கடவுளை பற்றி பேசியதால் கலைஞருக்கு பேச்சு போனதாம்

ஏன் சதா சர்வகாலமும் கடவுளை நினைத்திருந்த ரமணருக்கு புற்றுநோய் வந்தது? பெரும் முருகபக்தரான கிருபானந்தவாரியாருக்கு ஏன் கடைசிகாலத்தில் பேச்சு குழறியது

ஆத்திகர் எல்லாம் வாழ்வதுமில்லை, நாத்திகர் எல்லாம் அழிவதுமில்லை

இவை எல்லாம் எங்கோ முடிவுசெய்யபடும் விஷயங்கள், ஆத்திகனும் நாத்திகனும் கடவுளால் படைக்கபடுகின்றான். அவன் எந்த நோக்கத்திற்காக படைக்கபடுகின்றானோ அதனை முடித்தபின் அவன் கிளம்புகின்றான், ஒரு மூச்சு கூட அதனை தாண்டி விட மனிதனுக்கு அவகாசமில்லை

கண்ணனையும் ராமனையும் தவிர எந்த அவதாரம் அரசனாய் இருந்தது? ஒருவருமே இல்லை. சில அவதாரங்களும் இன்னும் பல கடவுளின் மனிதர்களும் அரசன் என்பவனுக்கு கட்டுபட்டு இருக்குமாறே அவர்கள் விதி இருந்தது.

கடவுளின் மனிதர்கள் என்பதால் அவர்கள் பூலோக விதிக்கு தப்பவில்லை, இங்கு அதே கடவுளால் அதிகாரம் கொடுகபட்ட கடவுளை அறியா அரசர்களுக்கு அடிபணிந்தே இருந்தனர், இது எல்லா மதமும் காட்டும் பக்கங்கள்.

இவை எல்லாம் மானிட சிந்தனைக்கு எட்டாத விஷயங்கள், விவேகானந்தர் 36 வயது வரை வாழ்ந்ததும், பெரியார் 96 வயது வரை வாழ்ந்ததும் இங்கேதான்

ஆனால் இருவருமே தாங்கள் செய்யவேண்டிய காரியங்களை தங்கள் வழியில் செய்துவிட்டுத்தான் சென்றார்கள்.

ஆக கடவுளை நம்புவன் பல்லாண்டு வாழ்வான் என்பதும், நம்பாதவனுக்கு பேச்சு வராது என்பதெல்லாம் வெறுப்பில் வரும் வார்த்தைகள்

மிஸ்டர் ராசா, ஆனானபட்ட ராமனும், கண்ணனுமே பேச ஒரு காலம் இருந்தது, வாய்மூடி கிளம்ப ஒரு காலம் இருந்தது. கலைஞருக்கும் இது ஓய்வு காலம், கீதை சொன்ன கண்ணனே வாய்மூடிய உலகில் கலைஞர் எம்மாத்திரம்?

இந்து அமைப்புகள் முதலில் செய்யவேண்டியது இம்மாதிரி ஆட்களை களையெடுப்பது, இல்லாவிட்டால் இவரால் பெரும் சர்ச்சைகள் ஏற்படலாம்

இதெல்லாம் எதில் முடியும்?

ஆர்.கே நகரில் வாங்கிய வோட்டுகளை விட மொத்த தமிழகம் முழுக்க மிக குறைவாக வாங்கி, கட்சி நாசமாய் போவதில் முடியும்

பாவம் தமிழக பாஜக, நல்ல வேட்பாளர்கள்தான் கிடைக்கவில்லை, நல்ல தலைவர்கள்தான் கிடைக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் அடிவாங்காமல் பேச கூடவா ஆளில்லை?