தாமரை சின்னத்திற்கு பதிலாக லவுட் ஸ்பீக்கர் சின்னத்தை உடனே கொடுக்க வேண்டும்

இந்து மதத்தையும் அதன் தெய்வங்களையும் திராவிட கழகம் பழித்தது கொஞ்சமல்ல, ராமனை எழுதிவிட்டான் என்பதற்காக அற்புதமான கம்பராமாயணைத்தையே சீண்டியவர்கள் அவர்கள்

பக்தி இலக்கியம் நிரம்பிய தமிழ் சங்க இலக்கியங்களை எல்லாம் மறைத்து, குறள் அகநானூறு போன்றவற்றிலே சுற்றிவந்தவர்கள்.

எதிலெல்லாம் இந்துமதம் இல்லையோ அதனை மட்டும்தான் கையில் எடுப்பார்கள். அப்படி இருந்தால் அதனை புறம் தள்ளுவார்கள்

கம்பராமயணம் அவர்களால் அப்படி கொச்சைபடுத்தபட்டது, இன்னும் ஏராள விஷயங்கள் உண்டு

இப்பொழுது அதெல்லாம் கடந்தாயிற்று, இப்பொழுது இருக்கும் திமுகவில் அப்படி எல்லாம் பேச யாருமில்லை, பலருக்கு தமிழே சரியாக வருவதில்லை

அவர்கள் அன்று அப்படி பேசியதால் ராசா இன்று இப்படி பேசினார் என மல்லுகட்டுவது நிச்சயம் நல்ல பலனை தராது

அவர்கள் இலக்கியங்களை, அதன் செய்திகளை விமர்சித்தார்களே தவிர, தனிபட்ட யாரையும் தாக்கியதில்லை

அவர்கள் தனிபட்ட முறையில் தாக்கியது ராஜாஜி, காமராஜர், நேரு என்ற மூவரையுமே

இம்மூவரும் அவர்களை கண்டுகொள்ளவுமில்லை, அதிலும் ராஜாஜி கோவில் யானை சாக்கடை பன்றியினை கண்டு ஒதுங்கி போதல் நன்று என்றவர்

பின்னாளில் அவரும் அரசியல் சாக்கடையில் அவர்களோடு நின்றார் என்பது வேறுவிஷயம்

மற்றபடி அக்கோஷ்டிகள் தனிபட்ட யாரையும் அவன் தாசி மகன் என சொன்னதில்லை.

ஆனால் அவர்களுக்குள்ளாகவே சொன்னார்கள், திமுக பிரிந்தபொழுது பெரியார் வாய்விட்டே சொன்னார், அப்படியா “நாங்கள் அவரின் பிள்ளைகள் அல்லவா?” என மழுப்பினர் திமுகவினர்

அதெல்லாம் பழைய கதை

ராசா வைரமுத்துவினை கண்டித்ததில் சிக்கல் இல்லை, ஆனால் மிக கடுமையான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதான் கண்டிக்கதக்கது.

“காமராஜரின் அன்னை கருவாடு விற்றவள்” என கலைஞர் சொல்ல, “ஆம் என் தலைவனின் தாய் கருவாடு மட்டும்தான் விற்றாள்” என கண்ணதாசன் சொன்னபோது தமிழகத்தில் சலசலப்பு இல்லை, பதில் பேச யாருமில்லை

அப்படி பேச நயமாக பேச தெரியாவிட்டால், கண்டனம் என்ற ஒற்றை வார்த்தையோடு ராசா நிறுத்துவது நல்லது

என்ன கட்சியோ இந்த தமிழக பாஜக, இதற்கு தாமரை சின்னத்திற்கு பதிலாக லவுட் ஸ்பீக்கர் சின்னத்தை உடனே கொடுக்க வேண்டும்