நாடக தமிழுக்காக வாழ்ந்த ஆர்.எஸ். மனோகரனுக்கு இன்று நினைவு நாள்… ஆழ்ந்த அஞ்சலிகள்
நாடக தமிழே சினிமா ஆனது , தமிழ் சினிமாவின் முன்னோடி நிச்சயம் நாடகமே
சிவாஜி முதல் கமல்வரை அங்கிருந்துதான் வந்தார்கள், பாலசந்தர் முதல் ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்
அதனால்தான் மிக சிறந்த படங்களை அவர்களால் கொடுக்க முடிந்தது, இன்றைய படங்கள் காணாமல் போக காரணம் யாரும் நடிக்கலாம், யாரும் இயக்கலாம் என திறந்துவிடபட்ட அமைப்பே காரணம்
கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பினை சொல்லிகொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது
ஆனால் சினிமாவிற்கு வந்தபின், புகழ்பெற்றபின் பலர் நாடகங்களை மறந்துவிடுவர், சிலர் அதனை மறைப்பார்கள்
வெகு சிலரே மறுபடியும் நாடக மேடைக்கு வருவார்கள், சோ ராமசாமி போன்ற வெகுசிலர். அதில் R.S மனோகரும் ஒருவர்
அவர் பெயர் லட்சுமி நாராயணன், ஆனால் மனோகரா நாடகத்தில் நடித்ததால் மனோகர் ஆனார், அப்படியே நிலைத்தும் விட்டது பெயர்
வண்ணகிளி முதல் இதயகனி வரை நடித்தவர் , எல்லா பாத்திரத்திலும் ஒரே நடிப்பு பாணியினை பின்பற்றிய நடிகர்
மிக சுத்தமாக தமிழ்பேசுவார், உச்சரிப்பு சரியாக இருக்கும். கொடுத்த பாத்திரத்தில் தன்னை நிறுத்துவார்.
அவரின் நடிப்பினை விட அவரின் நாடக வாழ்வு பாராட்டதக்கது
லங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் போன்ற நாடகங்களை, தமிழுணர்வு மிக்க நாடகங்களை அரங்கேற்றினார்
நல்ல வேளையாக அன்றேல்லாம் தும்பிகள், டம்ளர்கள் இல்லை இருந்திருந்தால் பெரும் அட்டகாசம் செய்திருப்பார்கள்
தமிழுணர்வும் தமிழர் பெருமையும் அவர் நாடகங்களில் நிரம்பி இருந்தன
இறப்பதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு கூட தன் வரகுண பாண்டியன் நாடகத்தை நடத்தினார்.
நாடக தமிழுக்காக வாழ்ந்த அந்த மனோகரனுக்கு இன்று நினைவு நாள், ஆழ்ந்த அஞ்சலிகள்