கதை விடுவதில் கில்லாடி மனுஷ்யபுத்திரர்

 

ஒன்றும் அறியாதவர்களிடத்தில் கதை விடுவதில் சிலர் கில்லாடிகள், அதில் மனுஷ்யபுத்திரர் என்பவர் மகா கில்லாடி

“ஏய் தேவதாசி முறையினை ஆரம்பித்தது இந்துக்கள், அதனை ஒழித்தது திராவிட இயக்கம்..” என தொடங்கிவிட்டார், வைரமுத்துத்துவிற்கு ஆதரவாம்

அதாவது ஒரு சொம்பு இன்னொரு சொம்பிற்கு சொம்பு தூக்கும் தருணம்

தேவ தாசிகளின் வரலாறு என்ன?

அக்காலத்தில் இந்துக்கள் என்று அல்ல, எல்லா ஆலயங்களிலும் பணி செய்ய பெண்களை சிறுவயதிலே நேர்ந்துவிட்டிருக்கின்றார்கள்

யூத வரலாறு அதனை சொல்கின்றது, ஆனால் யூத மரபுபடி அப்பெண் வயதுக்கு வந்ததும் வீடு திரும்ப வேண்டும். இயேசுவின் தாய் மரியாள் கூட அப்படி பணி செய்துவிட்டு திரும்பியவர்தான்

(அதன் இன்றைய வடிவம்தான் சிஸ்டர் கான்வென்ட் எனப்படும் உன்னதமான நிலையங்கள்..)

சில மதங்களில் அப்பெண்கள் காலமட்டும் அங்கு பணி செய்ய அனுமதிக்கபட்டனர், அவர்கள் தேவர் அடியார்கள் என அழைக்கபட்டனர், ஒரு காலத்தில் மிக உயர்வாக வணங்கபட்டவர்கள் அவர்கள்

ராஜராஜ சோழனின் தஞ்சை கோவிலில் ஏராளமான பெண்கள் அப்படி இருந்ததாக வரலாறு சொல்கின்றது. ஆலயத்தை பராமரிப்பது, பூச்சரங்களை தொடுப்பது என மிக உன்னத பணிகளை அவர்கள் செய்துவந்தனர்

வழிபடுதல், ஆடல் கலைகளில் கடவுளை வணங்குதல் என மிகபெரும் பணிகளை செய்தவர்கள். சமூகத்தில் அவர்களுக்கான் இடம் மிக உயர்வாய் இருந்தது

மன்னன் அவர்களை தொடுவதில்லை மாறாக வணங்கினான், மன்னனுக்கு தனியாக அந்தப்புரம் எனும் துறையே இருந்தது

பின்னாளில் அது குழம்பிற்று, மன்னர்கள் காலம் வீழ்ந்து மதகுருமார்கள் அட்டகாசம் ஆரம்பித்த காலத்தில் சர்ச்சைகள் தொடங்கின‌

பரத்தையர், கணிகையர், தேவரடியார் எல்லோரும் தேவடியா என பொதுவான பதத்தில் வந்தனர்

புனிதமாக ஆரம்பிக்கபட்ட அந்த பணி மிக கேவலமான கொடூரமாக மாறிப்போனது

ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், இந்துமதம் மூடகொள்கை நிரம்பியதுதான் ஆனால் எதிர்ப்பு இந்துக்களில் இருந்தே வந்தது,அதனை மறைப்பார்கள்

சதி எனும் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தை நிறுத்திய ராஜாராம் மோகன்ராய் ஒரு இந்து

மேலாடை அணியும் போராட்டத்தை நடத்திய வைகுண்டர் ஒரு இந்து

குழந்தை திருமணத்தை தடுத்து போராடியோர் இந்து

அப்படி இந்த தேவதாசி முறையினை பிரிட்டிஷ் இந்தியாவில் எதிர்த்து முதல் குரல் கொடுத்தது காஞ்சி ஆரிய மிஷன்

அது இந்தியா முழுக்க எதிரொலித்து , அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு செயலர் தாதாபாய் 1912 செப்டம்பர் 18ல் “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்” என்ற பெயரில் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

1912ல் திராவிட இயக்கமும் இல்லை, இங்கு பகுத்தறிவு அட்டகாசமும் இல்லை, கலைஞர் பிறக்கவுமில்லை, அண்ணாவிற்கே வயது 3

அப்பொழுதே சட்டம் வந்தது ஆனால் முழுமை அடையவில்லை, வட இந்தியாவில் சில இடங்களில் தடை செய்யபட்ட தேவதாசிமுறை சில இடங்களில் தொடர்ந்தது

ஜனவரி 24, 1930-ல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் முத்து லட்சுமி ரெட்டி

இதன் பின்பே பெரியார் கோஷ்டிகள் கிளம்பின , ஆனால் அவர்களில் மூவலூர் ராமாமிர்தம் எனும் பெண்ணின் போராட்டம் மெச்சதக்கது, அவரை ஆதரித்து பெரியாரும் போராடினார்

ஒருவழியாக 1947ல் அந்த சட்டம் சென்னையிலும் நிறைவேறிற்று, சத்யமூர்த்தி போன்றோர் எதிர்த்தனர் அதாவது ஆலயத்தில் பெண்கள் பணிசெய்யும் அடிநாதமும் தடைசெய்யபடும் என்பது போல் வாதிட்டார், ஆனால் பொட்டுகட்டும் முறையினை ஆதரிப்பது போல் இருந்தது அவரின் பேச்சு

“உன் வீட்டு பெண்ணை அனுமதி, என் வீட்டு பெண்களை விட்டுவிடு..” என சொன்ன முத்துலெட்சுமி ரெட்டியின் வேகத்திற்கு முன் சத்யமூர்த்தி அமைதியானார்

சென்னையில் தேவதாசி முறை தடைசெய்ய சட்டமியற்றியபொழுது முதல்வர் யார்? ஒ.பி ராமசாமி

ஆக இந்துக்களே காண சகிக்காத அக்கொடுமை இந்துக்களாலே எதிர்க்கபட்டு வெள்ளையனால் சட்டம் கொண்டுவரபட்டு அப்படியே தமிழ்நாட்டிலும் அதுவும் 1947லே முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்களால் சட்டசபைக்கு கொண்டு செல்லபட்டு சட்டமாக்க பட்ட விஷயத்திற்த்தான் இந்த மனுஷ்ய புத்திரன் அது திராவிட சாதனை என வந்து நிற்கின்றார்

இதெல்லாம் ஒரு வாதமா? விஷயம் தெரிந்தவர்கள் காரி துப்பமாட்டார்களா

அந்து சிதறல் மனுஷினை அருகில் வைத்திருக்கும் ஸ்டாலின் மீதும் படாதா?

தேவதாசி முறை சட்டமாக்கபட்டபொழுது திமுக எனும் கட்சி எப்படி இருந்தது? நாம் தமிழர் போல இருந்தது

வரலாறு அப்படி இருக்க, இந்த மனுஷ் இல்லா பொய்களை சொல்லி திராவிட பெருமை காக்க வந்துவிட்டாராம்

அடுத்தவன் போராட்டத்திற்கு உரிமை கோருகின்றது திமுக என சொல்ல வந்துவிட்டார் மனுஷியர்
, இதெல்லாம் எவ்வளவு பெரும் அவமானம்?