பழனிச்சாமிக்கோர் மோடி, மோடிக்கோர் டிரம்ப் …
காங்கிரஸ் வெளிநாட்டு தொழிலதிபர்களை இங்கு சம்பாதிக்க விட்ட கட்சி, சொனியா அவர்களின் ஏஜெண்ட் என பலர் சொல்லிகொண்டிருந்தான், அவர்களை எல்லாம் கம்பத்தில் கட்டி வைத்து பாஷா ஸ்டைலில் அடித்து சொல்ல வேண்டிய செய்தி இது
அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு இந்தியரை கழுத்தை பிடித்து வைத்திருக்கின்றார், எப்பொழுது வேண்டுமானாலும் வெளிதள்ளலாம், இதற்கு மேல் அமெரிக்க பொருளை வாங்கு, அமெரிக்கனை வேலைக்கு அமர்த்து என சுதேசி கொள்கையினை ஆங்கிலத்தில் சொல்லிகொண்டிருக்கின்றார்
அங்கு அமெரிக்க பொருள் மட்டும் விற்பார்களாம், ஆனால் உலகெங்கும் ஆப்பிள் பழம், போன் முதல் பர்கர், கேஎப்சி, பெப்சி வரை விற்பார்களாம் , குறிப்பாக இந்தியாவில் விற்பார்களாம் , கேள்வி கேட்க கூடாதாம்
இதனை விட பெரும் விஷயம் நடந்திருக்கின்றது, டிரம்ப் என்பவர் முதலில் தொழிலதிபர் பின்னர்தான் அமெரிக்க அதிபர், கட்டுமான கம்பெனி அவரின் தொழிலில் ஒன்று
இந்தியாவின் குர்கான் நகரில் 2000 கோடி செலவில் குடியிருப்பு வளாகத்தை டிரம்பின் கம்பெனி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று
அங்கே அமெரிக்கா அமெரிக்கனுக்கே என கோஷமிடும் டிரம்பினை, தேசபற்றுள்ள பாஜக அரசு இங்கு விடுமா என்றால் விட்டிருக்கின்றது
அதுவும் எப்படி அனுமதித்திருக்கின்றது?
கட்டுமான தொழிலில் 100% அந்நிய முதலீடு என சட்டத்தை திருத்தி அவருக்கு உதவியிருக்கின்றது
இப்படிபட்ட அநியாயத்தை எந்த அரசாவது செய்யுமா? இதனால் உள்நாட்டு கம்பெனி எப்படி எல்லாம் பாதிக்கபடும், இந்திய கம்பெனி இருக்க டிரம்பின் கம்பெனி எதற்கு?
இந்த பாஜக கோஷ்டி வாய்கிழிய பேசுவதுதான் தேசபற்று, ஆனால் எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்டுவதே கிடையாது
இப்பொழுது மோடியினை பார்க்க, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் அந்த எட்டப்பனை போலவே தெரிகின்றது
“துரை அவர்களே, என் நாடு உங்கள் நாடு. எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் உங்கள் கருணை மட்டும் என்மீது எப்பொழுதும் இருக்க வேண்டும், என் விசுவாசம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது”
ஆக இந்தியாவில் 110 கோடி, அமரிக்காவில் 40 கோடி என 150 கோடி மக்களை ஆள்கின்றார் டிரம்ப்
தவளைக்கு பாம்பும், பாம்புக்கு கருடனமும் என அந்த உலகம் இயங்குகின்றது
பழனிச்சாமிக்கோர் மோடி, மோடிக்கோர் டிரம்ப் என அரசியல் உலகம் இயங்கிகொண்டிருக்கின்றது.